சிரியா விமானப்படை ஓடுதளத்தில் விட்டு 45 ராணுவ வீரர்களை சுட்டுக்கொன்ற அல்கொய்தா தீவிரவாதிகள்
பெய்ரூட் : சிரியாவில் சிறைபிடித்த 45 ராணுவ வீரர்களை ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் போன்றே சுட்டுக்கொன்று அல்கொய்தா தீவிரவாதிகள் தங்களது வெறிச்செயலை உலகுக்கு காட்டியுள்ளனர்.
சிரியாவில் அதிபருக்கு எதிராக கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. இங்கு ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ்.ஐ.எஸ். மற்றும் அல்கொய்தாவின் நுஸ்ரா முன்னணி ஆகியவை ராணுவத்துக்கு கடும் அச்சுறுத்தலாக விளங்கி வருகின்றன.

இந்நிலையில், கடந்த 9-ம் தேதி வடமேற்கு சிரியாவின் அபு ஜுகோரில் உள்ள முக்கிய விமானப்படை தளத்தை நுஸ்ரா முன்னணி கைப்பற்றியது. அப்போது, 56 வீரர்களை சுட்டுக்கொன்றதுடன், ஏராளமான ராணுவ வீரர்களையும் சிறைபிடித்தது.
இந்நிலையில், சிறைப்பிடிக்கப்பட்ட ராணுவக் கைதிகளில் 45 பேரை நேற்று விமானப்படை ஓடுதளத்தில் வைத்து துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டதாக மனித உரிமை கண்காணிப்பகம் செய்தி வெளியிட்டுள்ளது.
நுஸ்ரா முன்னணி முதல் முறையாக இத்தனை வீரர்களை மொத்தமாக படுகொலை செய்துள்ளது. பொதுவாக சிறைபிடிக்கப்பட்ட பாதுகாப்பு படையினரை ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் தான் கொலை செய்து வருகின்றனர்.
தற்போது அல்கொய்தா துணை அமைப்பு தீவிரவாதிகளும் ஐ.எஸ். தீவிரவாதிகளைப் போன்றே கொடூரத்தை வெளிப்படுத்த தொடங்கியுள்ளனர்.












Click it and Unblock the Notifications