பாரீஸ் ஸ்டைலில் இங்கிலாந்தை தாக்க அல் கொய்தா திட்டம்: எம்ஐ5 தலைவர் எச்சரிக்கை

Subscribe to Oneindia Tamil

லண்டன்: பாரீஸ் பாணியில் இங்கிலாந்தில் தாக்குதல் நடத்த அல் கொய்தா திட்டமிட்டுள்ளது என்று அந்நாட்டு உளவு நிறுவன தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Al Qaeda planning Paris-style attack in UK, warns spy chief

இது குறித்து இங்கிலாந்தின் உளவு நிறுவனமான எம்ஐ5-ன் டைரக்டர் ஜெனரல் ஆன்ட்ரூ பார்கர் கூறுகையில்,

அண்மை காலங்களில் இங்கிலாந்து போலீஸார் மற்றும் எம்ஐ5 சேர்ந்து மூன்று தீவிரவாத தாக்குதல்களை தடுத்து நிறுத்தியுள்ளோம். இங்கிலாந்தில் தீவிரவாத அச்சுறுத்தல் அதிகரித்து வருகிறது. தீவிரவாதிகளின் அனைத்து திட்டங்களையும் பாதுகாப்பு துறையினரால் தவிடுபொடியாக்க முடியாது.
நாங்கள் கடும் முயற்சி செய்கின்ற போதிலும் தீவிரவாதிகளின் அனைத்து திட்டங்களையும் தடுக்க முடியாது.

அல் கொய்தா தீவிரவாதிகள் பாரீஸ் தாக்குதல் பாணியில் இங்கிலாந்தில் தாக்குதல் நடத்தி பலரை கொல்லக்கூடும் என்றார்.

தீவிரவாத அச்சுறுத்தலை அடுத்து இங்கிலாந்தில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அல் கொய்தாவின் சிரியா பிரிவு இங்கிலாந்தில் பாரீஸ் பாணியில் தாக்குதல் நடத்தக்கூடும் என்று கூறப்படுகிறது. அந்த தாக்குதலை சிரியா அல்லது ஈராக்கில் இருந்து நாடு திரும்பியுள்ள இங்கிலாந்தைச் சேர்ந்த போராளிகள் நடத்தக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

பயணிகள் விமானத்தை தாக்குவது, மும்பை பாணியில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடத்தில் துப்பாக்கிச்சூடு நடத்துவது, வாகனங்களை வைத்து ஆட்களை கொல்வது போன்று தீவிரவாதிகள் தாக்கலாம் என்று கருதப்படுகிறது.

இந்நிலையில் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பில் சேர இங்கிலாந்தில் இருந்து 600 பேர் சிரியா சென்றுள்ளனர் என்று நம்பப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+