துபாயில் முதன் முறையாக தமிழில் திருக்குர்ஆன் மாநாடு
துபாய்: துபாயில் முதன்முறையாக தமிழில் திருக்குர்ஆன் மாநாடு இன்று முதல் வரும் சனிக்கிழமை வரை தொடர்ந்து 3 நாட்களுக்கு நடைபெறுகிறது.
துபாயில் முதன்முறையாக தமிழில் திருக்குர்ஆன் மாநாடு பிப்ரவரி 4,5, 6 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. அல்கூஸ் பௌலிங் சென்டர் அருகில் உள்ள துபாய் அல்மனார் சென்டரில் மாநாடு நடைபெறும்.

சிறப்பு சொற்பொழிவாளர்களாக ஷேய்க் முபாரக் மதனீ, ஷேய்க் முப்தி உமர் சரீப், ஷேய்க் மஜீத் மஹ்லரி, மௌலவி அப்துல் பாசித் புஹாரி உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

கண்காட்சிகள், சிறப்புரைகள், பயிலரங்கம், போட்டிகள், ஆலோசனை மையங்கள் ஆகியவை மாநாட்டின் முக்கிய அம்சங்கள் ஆகும்.

மாநாட்டிற்கு வருவோருக்காக அமீரகம் முழுவதும் வாகன வசதி செய்யப்பட்டுள்ளது. பெண்களுக்கு தனி இட வசதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஜும்மா தொழுகைக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு அனைத்து சமய மக்களும் அழைக்கப்படுகிறார்கள். மாநாட்டில் பங்கேற்க அனுமதி இலவசம். இது குறித்து மேலும் விபரம் அறிய 056 7371 442 / 056 7371 449 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் அல்லது [email protected] என்ற இமெயில் ஐடிக்கு மெயில் அனுப்பலாம்.












Click it and Unblock the Notifications