Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஃபெய்லியரான லேண்டிங் கியர்.. கொஞ்சமும் பதறாமல் பத்திரமாக விமானத்தை தரையிறக்கிய விமானி! வாவ் சம்பவம்

Subscribe to Oneindia Tamil

கான்பெர்ரா: ஆஸ்திரேலியாவில் சிறிய ரக விமானம் ஒன்றில் லேண்டிங் கியர் திடீரென பழுதான நிலையில், விமானத்தை பத்திரமாக தரையிறக்கி விமானி அசத்தியிருக்கிறார்.

நேற்று ஆஸ்திரேலியாவின் சிட்னிக்கு அருகே இருக்கும் நியூகேஸில் விமான நிலையத்திலிருந்து வடக்கே போர்ட் மெக்குவாரிக்கு பீச் கிராஃப்ட் சூப்பர் கிங் ஏர் எனப்படும் சிறிய ரக விமானம் ஒன்று சென்றுகொண்டிருந்தது. இந்த விமானத்தில் விமான ஒருவதும், 60 மற்றும் 65 வயது மதிப்புள்ள மூதாட்டி மற்றும் முதியவர் என மொத்தம் மூன்று பேர் பயணித்திருக்கிறார்கள்.

Amazing pilot who safely lands plane with landing gear failure in Australia

இந்த விமானத்தில் அதிகபட்சமாக 11 பேர் வரை பயணிக்க முடியும். இந்த விமானத்தின் அதிகபட்ச வேகம் 536 கி.மீ. அதாவது ஒன்றரை மணி நேரத்தில் சென்னையில் இருந்து கன்னியாகுமரிக்கு சென்றுவிட முடியும். அதேபோல ஒரு முறை இதில் எரிபொருள் நிரப்பினால் சுமார் 4700 கி.மீ வரை பயணிக்க முடியும். எனவே சொந்தமாக விமானம் வாங்க விரும்புபவர்களுக்கு இது ஒரு நல்ல தேர்வு. அதேபோல விமான சேவைக்கும் இந்த விமானங்கள் பரவலாக பயன்படுத்தப்படுகிறது.

இப்படி இருக்கையில் போர்ட் மெக்குவாரிக்கு இந்த விமானத்தில் விமானியுடன் சேர்த்து 3 பேர் சென்றிருக்கிறார்கள். விமானம் கிளம்பி சிறிது நேரத்தில், லேண்டிங் கியர் வேலை செய்யவில்லை என்பது தெரிய வந்திருக்கிறது. இது ஒரு இக்கட்டான சூழல். பெரும்பாலும் பழைய விமானங்களில் இதுபோன்ற பிரச்னைகள் எழுவதுண்டு. இப்பிரச்னைக்கான தீர்வில் 0.1 சதவிகிதம் பிசுறு தட்டினாலும் கூட விமான பெரும் விபத்தில் சிக்க வாய்ப்பிருக்கிறது.

எனவே முழு கண்ட்ரோலையும் விமான கையில் எடுத்துக்கொண்டார். விமானத்தின் நிலைமை குறித்து கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பின்னர் விமானம், கொஞ்ச நேரம் விமான நிலையத்தையே சுற்றி சுற்றி வந்திருக்கிறது. இறுதியாக பத்திரமாக தரையிறக்கப்பட்டிருக்கிறது. இதில் யாருக்கும் சிறிய காயம் கூட ஏற்படவில்லை. அனைவரும் பாதுகாப்பாக விமானத்திலிருந்து மீட்கப்பட்டிருக்கின்றனர்.

இது குறித்து பயணி அளித்த பேட்டி, விமானியின் திறனை வெளி கொண்டு வந்திருக்கிறது. "எங்களுக்கு சூழல் புரிந்தது. நடுவானில் இருக்கிறோம். எங்களால் கீழே இறங்க முடியாது. ஏனெனில் லேண்டிங் கியர் வேலை செய்யவில்லை. அடுத்து சில நிமிடங்களில் நாங்கள் உயிரோடு இருப்போமா இல்லையா என்று கூட தெரியாது. இந்த நேரத்தில் விமானியாலும் எதுவும் செய்ய முடியாது. எனவே அவரை சத்தம் போடுவதால் எதுவும் நடந்துவிட போவதில்லை.

ஆனால் அவர் நினைத்தால் எங்களை காப்பாற்ற முடியும். அதை அவர் செய்தும் காட்டினார். எங்கள் விமானம் விமான நிலையத்தை சுற்றி சுற்றி வந்துக்கொண்டிருந்து. 2 மணி நேரமாக இதையேதான் விமானி இதையேதான் செய்துக்கொண்டிருந்தார். காரணம் விமானத்தின் எரிபொருள் காலியாக வேண்டும். லேண்டிங் கியர் இல்லாத நேரத்தில், தரையிறங்கும் போது விமானத்தின் இறக்கைகள்தான் முதலில் அடிவாங்கும். இறக்கையில்தான் எரிபொருள் இருக்கிறது.

எனவே நாங்கள் எரிபொருள் முழுவதையும் தீர்த்துவிட்டு, கீழே இறங்க முயன்றோம். ஆனால் எங்களுக்கு கீழே 20 பெலிக்கான் பறவைகள் சுற்றிக்கொண்டிருந்தன. பறவைகள் ஆபத்தானவை, அதுவும் இதுபோன்ற சிறிய விமானங்களுக்கு அது நிச்சயம் பயங்கர ஆபத்தை ஏற்படுத்திவிடும். இருப்பினும், இதெல்லாம் கவனத்தில் கொண்டு விமானி சாதுர்யமாக விமானத்தை தரையிறக்கினார்.

எங்களுக்கு சிறிய காயம் கூட ஏற்படவில்லை. விமானியின் திறமை மிகவும் அற்புதமானது. இது போன்ற விமானிகள்தான் தற்போது தேவை" என்று கூறியுள்ளார்.

53 வயதான பீட்டர் ஷாட், தனது 15 வயதிலிருந்து விமானத்தை இயக்கி வருகிறார். இந்த சம்பவத்திற்கு பிறகு அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+