புதினை படுகொலை செய்ய முயற்சி.. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.. பகீர் கிளப்பும் உக்ரைன் உளவுத்துறை
மாஸ்கோ: உக்ரைன் மீதான போர் நடவடிக்கைக்கு மத்தியில் ரஷ்ய அதிபர் விலாடிமிர் புதினை கொலை செய்ய முயன்று அவருக்கு எதிராக தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக உக்ரைன் பாதுகாப்பு துறையின் உளவுத்துறை தலைவர் மேஜர் ஜெனரல் கைரிலோ புடானோ கூறியுள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் 24ம் தேதி போரை துவங்கியது. 3 மாதங்கள் தாண்டியும் இன்னும் போர் முடிவுக்கு வரவில்லை. போர் நிறுத்தம் தொடர்பாக இருநாடுகள் இடையே நடந்த பேச்சுவார்த்தையும் கைக்கொடுக்கவில்லை.
மேலும் உக்ரைன் மீதான போரை கைவிட்டு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் வலியுறுத்தியும் ரஷ்யா செவிசாய்க்கவில்லை. இதனால் தொடர்ச்சியாக ரஷ்யா, உக்ரைன் மீது போர் நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.

உக்ரைன்-ரஷ்யாவின் குற்றச்சாட்டுகள்
இந்நிலையில் தான் உக்ரைன், ரஷ்யா குறித்து பல்வேறு தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்ற. அதாவது போரை சமாளிக்க உக்ரைன் அமெரிக்கா உதவுடன் உயிரி ஆயுத ஆய்வில் ஈடுபட்டதாக ரஷ்யா சார்பில் குற்றம்சாட்டப்பட்டது. இதனை உக்ரைன் மறுத்த நிலையில் மனிதாபிமானமற்ற முறையில் பள்ளிகள், மருத்துவமனைகள் மீது ரஷ்யா குண்டுவீசுவதாக கூறி வருகிறது.

விலாடிமிர் புதின் பாதிப்பு
இது ஒருபுறம் இருக்க உக்ரைன் போரை அதிகபட்சமாக மே 9ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என ரஷ்ய அதிபர் விலாடிமிர் புதின் உத்தரவிட்ட நிலையில் இதை நிறைவேற்ற முடியாததால் விலாடிமிர் புதின் ரஷ்ய படை தளபதிகள், பாதுகாப்புத்துறை அமைச்சரை திட்டி கோபத்தை வெளிப்படுத்தியதாக தகவல்கள் கசிந்தன. மேலும் விலாடிமிர் புதினுக்கு ரத்த புற்றுநோய் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இருப்பினும் இதுதொடர்பாக ரஷ்யா தரப்பில் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.

கொலை முயற்சி
இந்நிலையில் தான் ரஷ்ய அதிபர் விலாடிமிர் புதினை கொலை செய்ய முயற்சி நடந்ததாக பகீர் தகவல் வெளியாகி உள்ளது. விலாடிமிர் புதினின் உடல்நலம் குறித்து பல்வேறு தகவல்கள் பரவி வரும் நிலையில் இது அனைவரின் புருவத்தை உயர்த்தி உள்ளது. இதுபற்றி உக்ரைனின் பாதுகாப்பு உளவுத்துறையின் தலைவரான மேஜர் ஜெனரல் கைரிலோ புடானோ, உக்ரைன்ஸ்கா பிராவ்தா தொலைக்காட்சியிடம் கூறியுள்ளார். அவர் கூறியுள்ளதாவது:

உண்மையில் நடந்துள்ளது
பிப்ரவரி 24ல் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்த கருங்கடல் மற்றும் காஸ்பியன் கடலுக்கும் இடையேயான காகசஸில் ரஷ்ய அதிபர் விலாடிமிர் புதினை படுகொலை செய்ய முயற்சி நடந்தது. காகசஸ் பிரதிநிதிகளால் மேற்கொள்ளப்பட்ட இந்த கொலை முயற்சியில் விலாடிமிர் புதின் தப்பித்தார். இது உண்மையில் நடந்துள்ளது'' எனவும் கூறியுள்ளார். இருப்பினும் இதுபற்றி இன்னும் ரஷ்யா தரப்பில் விளக்கம் அளிக்கப்படவில்லை.
Recommended Video

நம்ப முடியவில்லை
இதற்கிடையே விலாடிமிர் புதினை சுற்றி எப்போதும் பாதுகாப்பு அதிகாரிகள் இருப்பார்கள். இதனை மீறி அவரை கொலை செய்ய முயன்றது என்பது நம்ப முடியவில்லை பலர் சந்தேகம் தெரிவிக்கின்றனர். ஆனாலும் விலாடிமிர் புதின் இதற்கு முன்பு அதாவது 2017 காலக்கட்டத்தில் பேசியபோது தன்னை 5 முறை கொலை செய்ய முயற்சி நடந்திருப்பதாக தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
-
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு?












Click it and Unblock the Notifications