அதிகாலையிலேயே குலுங்கிய பூமி.. பாகிஸ்தானில் திடீர் நிலநடுக்கம்.. ரிக்டரில் 5.2 என பதிவு - மக்கள் ஷாக்

Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் இன்று அதிகாலையில் திடீரென்று நிலநடுக்கம் ஏற்பட்டது. பாகிஸ்தானின் முல்தான் நகரில் இருந்து 149 கிலோமீட்டருக்கு மேற்கே 10 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் நிலை கொண்டிருந்தது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.2 என்ற அளவில் பதிவானதால் மக்கள் அச்சமடைந்தனர்.

நம் நாட்டின் அண்டை நாடான பாகிஸ்தானில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று அதிகாலையில் திடீரென்று நிலநடுக்கம் ஏற்பட்டது.

pakistan earthquake

பாகிஸ்தானின் முல்தான் நகர் அருகே நிலநடுக்கம் ஏற்பட்டது. இன்று அதிகாலையில் மக்கள் வழக்கம்போல் தங்களின் வீடுகளில் தூங்கி கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று பூமி குலுங்கி நிலநடுக்கம் ஏற்பட்டது.

நிலநடுக்கத்தை உணர்ந்த மக்கள் தூக்கத்தில் இருந்து எழுந்து வீடுகளை விட்டு வெளியேறி வந்துள்ளனர். இந்த நிலநடுக்கத்தால் வீட்டில் உள்ள பொருட்கள் குலுங்கி விழுந்தன. பாகிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை தேசிய நிலஅதிர்வு மையம் உறுதி செய்துள்ளது. இதுதொடர்பாக அந்த மையம் சார்பில், ‛‛பாகிஸ்தானில் இன்று அதிகாலை 3.54 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் 5.2 என பதிவாகி உள்ளது.

அதேபோல் ஜெர்மன் புவிஅறிவியல் ஆராய்ச்சி மையம் சார்பில், ‛‛மத்திய பாகிஸ்தானில் 5.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. உயிரிழப்புகள் அல்லது சேதங்கள் குறித்த தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. இந்த நிலநடுக்கம் முல்தானுக்கு மேற்கே சுமார் 149 கிலோமீட்டர் (92.5 மைல்) தொலைவில் பூமிக்கடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் நிலை கொண்டு இருந்தது'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+