நீச்சல் குளத்தில் பெண்களுக்கு பாலியல் சீண்டல்.. இந்திய மருத்துவர் சிங்கப்பூரில் சிறையில் அடைப்பு!
சிங்கப்பூருக்கு சுற்றுலா சென்ற இந்திய மருத்துவர் அங்குள்ள நீச்சல் குளத்தில் குளித்த நான்கு பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
Recommended Video

சிங்கப்பூர்: சிங்கப்பூருக்கு சுற்றுலா சென்ற இந்திய மருத்துவர் அங்குள்ள நீச்சல் குளத்தில் குளித்த நான்கு பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்திய மருத்துவர் ஜகதீப் சிங் அரோரா. 46 வயதான இவர் தனது பிறந்தநாளை கொண்டாடுவதற்காக மகள் மற்றும் மனைவியுடன் சிங்கப்பூர் சென்றுள்ளார்.
அங்குள்ள பிரபல ஹோட்டலில் குடும்பத்துடன் தங்கியிருந்தார் அரோரா. இந்நிலையில் கடந்த ஜூன் 28ஆம் தேதி இரவு 9 மணியளவில் அங்கிருந்த நீச்சல் குளத்தில் குடும்பத்துடன் குளித்துள்ளார் அரோரா.

பாலியல் தொல்லை
அப்போது அந்த நீச்சல் குளத்தில் குளித்துக்கொண்டிருந்த சக பெண்களுக்கு மகள் மற்றும் மனைவி முன்னிலையில் அவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

லிதுவேனியா சுற்றுலாப் பயணி
அவர்களில் ஒருவர் லிதுவேனியாவை சேர்ந்த 25 வயதான சுற்றுலாப்பயணி ஆவார். அந்த ஹோட்டலின் 57வது மாடியில் உள்ள நீச்சல் குளத்தில், அன்றிரவு 9 மணியளவில் அங்கு போட்டோ எடுத்துக்கொண்டிருந்தார்.

செக்யூரிட்டியிடம் புகார்
அப்போது தண்ணீருக்குள் இருந்தபடியே அந்த பெண்ணை நெருங்கிய அரோரா அவரின் பின்பக்கத்தை தொட்டுள்ளார். இதுகுறித்து அந்த பெண் தனது கணவரிடம் தெரிவிக்கவே விஷயம் செக்யூரிட்டி வரை சென்றது.

வயிற்றை தொட்டு
அடுத்த சில நிமிடங்களிலேயே நீச்சல் குளத்தில் இருந்த கொரிய நாட்டைச் சேர்ந்த ஒரு பெண்ணின் வயிற்றை தொட்டு பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். பின்னர் குளத்தில் இருந்து வெளியேறிய அரோரா பின்னர் மீண்டும் வந்து அந்தப் பெண்ணின் பின்பக்கத்தை தொட்டுள்ளார்.

மது போதையில்
மேலும் அவர் 4வதாக ஒரு பெண்ணுக்கு பாலியல் சீண்டல் கொடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாலியல் சீண்டலில் ஈடுபடுவதற்கு முன்னதாக அரோரா மது அருந்தியிருந்ததாக அந்நாட்டு பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.

மகளின் முன்னிலையில்
தனது 11 வயது மகளின் முன்னிலையில் மருத்துவர் அரோரா இந்த குற்றங்களில் ஈடுபட்டுள்ளார். இந்தியாவில் அவர் மீது எந்த குற்றச்சாட்டுகளும் இல்லை.

2 வாரம் சிறையிலடைப்பு
இந்நிலையில் சிங்கப்பூரில் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து சிக்கியுள்ளார் அரோரா. அவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் நேற்று 2 வார நீதிமன்ற காவல் விதித்துள்ளது.

மூன்று அபராதங்கள்
குற்றச்சாட்டு நிரூபணம் ஆகும் நிலையில் அவர் இரண்டு ஆண்டுகளுக்கு சிறையில் அடைக்கப்படலாம், அபராதம் விதிக்கலாம், முறியடிக்கப்படலாம் அல்லது மூன்று அபராதங்களுடன் தண்டிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications