பேஸ்புக் நிறுவன ரகசியங்களை திருடும் கும்பல்... இந்திய பெண்ணை துப்பறிய அனுப்பிய மார்க்!
பேஸ்புக் நிறுவன ரகசியங்களை வெளியிடும் திருட்டு கும்பலை கண்டுபிடிக்க இந்திய பெண்ணின் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டு இருக்கிறது.
நியூயார்க்: பேஸ்புக் நிறுவன ரகசியங்களை வெளியிடும் திருட்டு கும்பலை கண்டுபிடிக்க இந்திய பெண்ணின் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டு இருக்கிறது.
சோனியா அவுஜா என்ற இந்திய பெண்ணின் தலைமையில் துப்பறியும் குழுவை நேற்று உருவாக்கி இருக்கிறார் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பர்க். அந்நிறுவன அதிகாரிகள் அனைவரையும் இவர் விசாரிக்க இருக்கிறார்.
பேஸ்புக்கில் நடக்க இருக்கும் மாற்றங்களை முன்கூட்டிய அந்நிறுவன ஊழியர்கள் சிலர் போட்டோ எடுத்து போட்டி நிறுவனங்களுக்கு அளிப்பதாக புகார் எழுந்து உள்ளது. இதை கண்டுபிடிக்கவே இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது.

கசிகிறது
பேஸ்புக் நிறுவனத்திற்கு கடந்த சில மாதங்களாக இந்த பிரச்சனை இருந்து வருகிறது. அந்த நிறுவனம் எந்த ஒரு பொருள் குறித்து விவாதம் செய்தாலும் அது உடனடியாக போட்டி நிறுவனங்களுக்கு தெரிந்துவிடுகிறது. அவர்களின் எதிர்கால திட்டங்கள் கூட போட்டி நிறுவனங்களுக்கு கசிந்து இருக்கிறது. இது எப்படி செல்கிறது என்று தெரியாமல் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பர்க் குழம்பி வந்தார்.

எப்படி செல்கிறது
பேஸ்புக்கில் நடக்கும் அலுவலக கூட்டங்களில் மூலம் இந்த தகவல் வெளியாவது கண்டுபிடிக்கப்பட்டது. சில நாட்களுக்கு முன் பேஸ்புக் தங்கள் டைம்லைன் கொள்கைகளை மாற்றியது. இந்த விஷயம் அவர்கள் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கும் முன் பேஸ்புக் மீட்டிங்கில் பேசியதை வைத்து யாரோ வெளியே தெரிவித்து இருக்கிறார்கள்.

இந்தியாவை சேர்ந்த பெண்
தற்போது இதை கண்டுபிடிக்க குழு ஒன்று அமைக்கப்பட்டு இருக்கிறது. மார்க் ஏற்கனவே இதுகுறித்து எச்சரித்து இருந்தார். இந்த நிலையில் தற்போது சோனியா அவுஜா என்ற இந்திய பெண்ணின் தலைமையில் துப்பறியும் குழு அமைக்கப்பட்டுள்ளது.

விசாரணை நடத்துவார்
மார்க்கிற்கு மிகவும் நம்பகமான பெண் சோனியா என்று கூறப்படுகிறது. இவர் ஒவ்வொரு ஊழியரின் ஃபோனையும் வாங்கி சோதனை நடத்த இருக்கிறார். எதிர் நிறுவன ஆட்களுடன் அவர்கள் பேசி இருக்கிறார்களா என்று சோதனை செய்ய இருக்கிறார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications