இலங்கை போர்க்குற்றம் பற்றி சுதந்திரமான சர்வதேச விசாரணை தேவை. ஐ.நா. விவாதத்தில் அன்புமணி வலியுறுத்தல்
ஜெனீவா : இலங்கை போர்க்குற்றம் பற்றி சுதந்திரமான சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்று ஐ.நா. பொது விவாதத்தில் பங்கேற்ற பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்ட போரின் போது மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றம் நடந்ததாக ஐ.நா. மனித உரிமை ஆணையம் சமீபத்தில் அறிக்கை தாக்கல் செய்தது. இந்த அறிக்கை மீது இன்று (புதன்கிழமை) பொது விவாதம் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு பேசிய பெரும்பாலான நாடுகளின் பிரதிநிதிகள் சர்வதேச ஒத்துழைப்போடு போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கருத்தையே முன்வைத்தனர்.
இலங்கை எடுக்கும் முயற்சிகளுக்கு ஆதரவு தெரிவிப்பதாக கொரியா தெரிவித்துள்ளது. இலங்கையில் நல்லிணக்க நடவடிக்கைக்கு துணை நிற்பதாக ஜப்பான் கூறியது. ஐ.நா. விசாரணை அறிக்கை மட்டுமே தீர்வாக அமையாது என்ற கருத்தை இங்கிலாந்து தனது கருத்தை முன்வைத்தது.
இந்த விவாதத்தில் பசுமை தாயகம் சார்பில் பங்கேற்றுப் பேசிய அன்புமணி ராமதாஸ், இலங்கை போர்க்குற்றம் குறித்து சுதந்திரமான சர்வதேச விசாரணை தேவை என்று வலியுறுத்தினார்.
இறுதிக்கட்ட போர் முடிந்து இத்தனை ஆண்டுகளாகியும் தமிழர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட நிலங்கள் திருப்பி அளிக்கப்படவில்லை என்றும், இன்னும் அங்குள்ள தமிழர்கள் அச்சத்துடனேயே வாழ்வதாகவும் அன்புமணி குறிப்பிட்டார்.
-
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன்












Click it and Unblock the Notifications