இலங்கை போர்க்குற்றம் பற்றி சுதந்திரமான சர்வதேச விசாரணை தேவை. ஐ.நா. விவாதத்தில் அன்புமணி வலியுறுத்தல்
ஜெனீவா : இலங்கை போர்க்குற்றம் பற்றி சுதந்திரமான சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்று ஐ.நா. பொது விவாதத்தில் பங்கேற்ற பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்ட போரின் போது மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றம் நடந்ததாக ஐ.நா. மனித உரிமை ஆணையம் சமீபத்தில் அறிக்கை தாக்கல் செய்தது. இந்த அறிக்கை மீது இன்று (புதன்கிழமை) பொது விவாதம் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு பேசிய பெரும்பாலான நாடுகளின் பிரதிநிதிகள் சர்வதேச ஒத்துழைப்போடு போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கருத்தையே முன்வைத்தனர்.
இலங்கை எடுக்கும் முயற்சிகளுக்கு ஆதரவு தெரிவிப்பதாக கொரியா தெரிவித்துள்ளது. இலங்கையில் நல்லிணக்க நடவடிக்கைக்கு துணை நிற்பதாக ஜப்பான் கூறியது. ஐ.நா. விசாரணை அறிக்கை மட்டுமே தீர்வாக அமையாது என்ற கருத்தை இங்கிலாந்து தனது கருத்தை முன்வைத்தது.
இந்த விவாதத்தில் பசுமை தாயகம் சார்பில் பங்கேற்றுப் பேசிய அன்புமணி ராமதாஸ், இலங்கை போர்க்குற்றம் குறித்து சுதந்திரமான சர்வதேச விசாரணை தேவை என்று வலியுறுத்தினார்.
இறுதிக்கட்ட போர் முடிந்து இத்தனை ஆண்டுகளாகியும் தமிழர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட நிலங்கள் திருப்பி அளிக்கப்படவில்லை என்றும், இன்னும் அங்குள்ள தமிழர்கள் அச்சத்துடனேயே வாழ்வதாகவும் அன்புமணி குறிப்பிட்டார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications