காய்ச்சல் அடிச்சதால் விட்டுட்டு போயிட்டீங்களே.. எனக்கு கல்யாணம்ங்க.. சீனாவில் கதறும் ஆந்திர பெண்
Recommended Video
பெய்ஜிங்: எனக்கு 18ம் தேதி கல்யாணம்.. எப்படியாவது இந்தியா அழைத்துச் செல்லுங்கள் என அதிகாரிகளுக்கு சீனாவிலிருந்தபடி வீடியோவில் கோரிக்கை வைத்துள்ளார் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ஒரு இளம் பெண்.
வுஹான் மாகாணத்தில் சிக்கியுள்ள இந்தியர்களை இந்தியா சிறப்பு விமானம் மூலமாக தாயகம் அழைத்து வந்தது. அப்போது அதிகமாக காய்ச்சல் அடிப்பதை காரணம் காட்டி, "நீங்கள் எங்களோடு வர வேண்டாம்" என கர்னூலை பூர்வீகமாக கொண்ட அன்னம் ஜோதியை அங்கேயே அதிகாரிகள் விட்டுவிட்டு வந்துள்ளனர்.
இவர் டிசிஎஸ் நிறுவனத்திற்காக பணியாற்றுபவர் என்றும் கூறப்படுகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பால்தான் காய்ச்சல் இருந்திருக்கும் என அதிகாரிகள் நினைத்தனர்.

திருமணம்
ஆனால், தனக்கு காய்ச்சல் குணமடைந்துவிட்டதாகவும், எப்படியாவது அழைத்து செல்லுங்கள் எனவும் அன்னம் ஜோதி வீடியோ மூலம் கோரிக்கைவிடுத்துள்ளார். இவருக்கு வரும் 18ம் தேதி திருமணம் நடைபெற உள்ளது என்பதுதான் இதில் முக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது. வீடியோவில் ஜோதி கூறுகையில், என்னுடன் பணியாற்றும் சுமார் 58 பேர் இந்தியா அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

2வது விமானமும் இல்லை
நானும் அதே விமானத்தில் வூஹானிலிருந்து ஆந்திரா வர வேண்டியது. ஆனால், எனக்கும், மற்றொருவருக்கும் காய்ச்சல் இருந்தது. இதற்காக, முதல் விமானத்தில் எங்களை ஏற்றவில்லை. 2வது விமானத்தில் கூட்டிச் செல்வதாக கூறினர். ஆனால் பின்னர், அதிகாரிகளை போனில் தொடர்பு கொண்டு, கேட்டபோது 2வது விமானத்திலும் அழைத்துச் செல்ல முடியாது என கூறிவிட்டனர்.

காய்ச்சல் குறைந்துவிட்டது
உங்களுக்கு காய்ச்சல் இருக்கிறது. உங்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லலை என சீன அதிகாரிகள் உறுதி செய்யவில்லை. எனவே அழைத்து செல்ல முடியாது என அதிகாரிகள் தெரிவித்துவிட்டனர். ஆனால் எனக்கு இப்போது காய்ச்சல் குறைந்துவிட்டது. மூச்சு திணறல் உள்ளிட்ட கொரோனா வைரஸ் நோய் அறிகுறி எதுவுமே இல்லை. இது சாதாரண பிரச்சினைதான் என்று தெரிகிறது.
|
கோரிக்கை
எனவே, என்னை இந்தியா அழைத்துச் செல்லுங்கள். என்னை அங்கு வைத்து சோதிட்டு பார்த்தாலும் ஓகேதான். இவ்வாறு ஜோதி நெகிழ்ச்சியோடு கோரிக்கைவைத்துள்ளார். ஜோதியை எப்படியாவது மீட்டு வாருங்கள் என்ற கோரிக்கை ஆந்திரா முழுக்க எதிரொலிக்க தொடங்கியுள்ளது. இதுகுறித்து மத்திய அரசு இன்னும் எந்த பதிலும் சொல்லவில்லை. அதேநேரம், சீனாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் யாரையுமே அழைத்து செல்ல முடியாது என அந்த நாடு அறிவித்துவிட்டது.
-
சிங்கப்பூரில் இந்தியாவை பாராட்டிய அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர்.. வியந்து போய் சொன்ன விஷயம் -
ஜப்பானுக்கு தண்ணி காட்டும் சீனா.. இருந்தது ஒன்னே ஒன்னு அப்போ அதுவும் போச்சா!! -
தமிழகம் வந்தடைந்த கிருஷ்ணா நதி நீர்.. இரவுக்குள் பூண்டி ஏரியை அடையும்! கோடையில் சென்னைக்கு நிம்மதி -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்!












Click it and Unblock the Notifications