கொளுத்தும் வெயில்... இஸ்ரேல் ஜூவில் "ஜில் ஜில் கூல் கூல்" கவனிப்புக்குள்ளாகும் விலங்குகள்!
ஜெருசலேம்: கோடையின் உக்கிரத்தில் இருந்து தப்பிக்க இஸ்ரேல் வனவிலங்கு பூங்காக்களில் விலக்குகளுக்கு ‘ஐஸ்' உணவுகள் வழங்கப்படுகின்றன.
இந்தியாவைப் போலவே உலகின் பல்வேறு பகுதிகளில் வெப்பத்தின் உக்கிரம் அதிகமாகவே உள்ளது. பருவநிலை மாற்றத்தால் ஆண்டுக்கு ஆண்டு வெப்பம் மற்றும் மழையின் அளவு அதிகரிப்பதாக நிபுணர்கள் கூறுகிறார்கள்.
வெயிலின் கொடுமையிலிருந்து தப்பிக்க மனிதர்கள் பல்வேறு வழிகளைக் கடைபிடிக்கிறார்கள். வெளியில் செல்லும் போது குடை, தொப்பி உள்ளிட்டவற்றை எடுத்துச் செல்வது, வீடுகளில் ஏசி பயன்படுத்துவது, குளிர்ச்சியான உணவுப் பொருட்களைச் சாப்பிடுவது என.

விலங்குகள்...
ஆனால், மனிதர்களேத் தாங்கிக் கொள்ள முடியாத வெயிலை விலங்குகள், பறவைகள் எப்படி சமாளிக்கும். அதிலும், பனிப்பிரதேசங்களில் வாழ்வதற்குரிய உடலமைப்பை பெற்ற விலங்குகளை வெயில் காலங்களில் வனவிலங்கு உயிரியல் பூங்காக்களில் பராமரிப்பது சற்று சிரமமான விஷயம் தான்.

ஜெருசலேம் உயிரியல் பூங்கா...
இதனால் தான் இஸ்ரேல் நாட்டில் ஜெருசலேமில் உள்ள வனவிலங்கு உயிரியல் பூங்காவில் சில விஷேச வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, அங்குள்ள விலங்குகளின் அறைகளில் உள்ள ஜன்னல்கள் காற்றோட்டத்திற்காக திறந்து வைக்கப்பட்டுள்ளன.

ஜில் ஜில் உணவு...
அதோடு, விலங்குகளின் இருப்பிடங்களைச் சுற்றி தண்ணீர் நிரம்பிய கால்வாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. விலங்குகளுக்கான உணவுகளை ஐஸ் கட்டியில் புதைத்து நீரில் தூக்கி வீசுகிறார்கள் பூங்கா ஊழியர்கள்.

நீரில் விளையாடி...
அவற்றை நீரில் விளையாடியபடியே மகிழ்ச்சியாக சாப்பிட்டு கோடையைச் சமாளிக்கின்றன அங்கு வாழும் விலங்குகள். இதனால், அவற்றிற்கு கோடையின் உக்கிரம் அவ்வளவாக தெரிவதில்லை என்கிறார்கள் பூங்கா ஊழியர்கள்.

காற்றோட்டம்...
பூங்கா காப்பாளர் டென்னிஸ் ஸ்மித் கூறுகையில், அவற்றின் அறைகளின் கதவுகளைத் திறந்து விடுவதன் மூலம் அவற்றுக்கு சற்று வெட்கை தணிகிறது. மேலும் உணவு, பழங்கள் உள்ளிட்டவற்றை ஐஸ் கட்டிக்குள் வைத்துக் கொடுக்கும்போது அவை மகிழ்ச்சியுடன் அவற்றை சாப்பிடுகின்றன என்றார்.












Click it and Unblock the Notifications