நடுகடலில் மரண போராட்டம்..ஜப்பான் கப்பலில் புதிதாக 70 பேருக்கு கொரோனா பாதிப்பு.. பீதியில் இந்தியர்கள்
Recommended Video
டோக்கியோ: ஜப்பானில் தனிமைப்படுத்தப்பட்ட ஹாங்காங் நிறுவனத்தின் கப்பலில் மேலும் 70 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இருப்பது சோதனையில் உறுதியாகி உள்ளது. மொத்தம் 355 பேர் இதுவரை அந்த கப்பலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பதாக ஜப்பானிய சுகாதார அமைச்சர் கட்சுனோபு கடோ ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
சீனாவில் இருந்து ஹாங்காங்கைச் சேரந்த கார்னிவல் கார்ப் நிறுவனத்திற்குச் சொந்தமான டைமண்ட் பிரின்சஸ் என்ற சொகுசு கப்பல், கடந்த பிப்ரவரி 3 ஆம் தேதி டோக்கியோவின் தெற்கே யோகோகாமாவுக்கு பயணிகள் பணியாளர்கள் என 3700 பேருடன் வந்தது.
அப்போது ஜப்பானுக்குள் செல்வதற்கு முன்பு ஹாங்காங்கைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத் கப்பல் தனிமைப்படுத்தப்பட்டது

நடுக்கடலில் கப்பல்
அதன்பிறகு கப்பலை தனிமைப்படுத்திய ஜப்பான் அரசு யாரையும் ஜப்பானுக்குள் இறங்க அனுமதிக்காமல் அவர்களை கப்பலிலேயே சிறை வைத்தது. அந்த கப்பலில் 137 இந்தியர்கள் தங்களை எப்படியாவது இந்தியாவுக்கு திருப்பி அனுப்புமாறு மன்றாடி வருகின்றனர். இதேபோல் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களும் தங்களை தங்கள் நாட்டுக்கு அனுப்பி வைக்கும் படி கேட்கிறார்கள். ஆனால் ஜப்பான் அரசு அனைவரையும் சோதித்த பின்னரே முடிவுசெய்வோம் என்று தீர்மானமாக இருக்கிறது.

3700 பேர் உள்ளார்கள்
இந்நிலையில் அந்த டைமண்ட் பிரின்சஸ் சொகுசு கப்பலில் 3700 பேர் உள்ள நிலையில் தினமும் இரட்டை இலக்கத்தில் புதிது புதிதாக கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவது அதிகரித்துள்ளது. இந்தியர்கள் இருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நடுகடலில் மரண போராட்டத்துன் அவர்கள் தத்தளித்து வருகிறார்கள்.

தினமும் சோதனை
இதுவரை 355 பேர் கொரோனா பாதிப்புடன் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு உள்ளவர்களை ஜப்பான் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறது. மற்றவர்களை கொரோனா பாதிப்பு உள்ளதா என்பதை தினமும் சோதித்து ஆராய்ந்து வருகிறது. கொரோனா பாதிப்பு வெளியில் தெரிய குறைந்தது 15 நாட்கள் ஆகும் என்பதால் அவர்களை தனிமைப்படுத்தியே வைத்துள்ளது.

355 ஆக உயர்வு
நேற்று ஒரே நாளில் 70 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பது சோதனையில் உறுதி செய்யப்பட்டு இருப்பதாகவும் மொத்தம் 355 பேர் இதுவரை அந்த கப்பலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பதாக ஜப்பானிய சுகாதார அமைச்சர் கட்சுனோபு கடோ ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். இதன் மூலம் அதன் பாதிப்பு எவ்வளவு தீவிரமாக இருக்கிறது என்பது உறுதியாகி உள்ளது. ஜப்பான் கப்பலில் உள்ள 137 இந்தியர்களை நாட்டுக்கு கொண்டுவருவது இதுவரை எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications