570 மாணவர்கள் படித்து வந்த மற்றொரு தமிழ்ப்பள்ளியை மூடும் அபுதாபி கல்விக் கழகம்
அபுதாபி: வெளிப்படையான பாதுகாப்புக் காரணங்களுக்காக அபுதாபியின் பள்ளிக் கல்விக் கழகம் இந்தியப் பள்ளிகளை மூடும் நடவடிக்கையில் தற்போது மற்றுமொரு பள்ளி மூடப்பட உள்ளது.
சமீபகாலமாக, அபுதாபியின் அரசு கல்விக் கழகம் அங்குள்ள குடியிருப்புப் பகுதிகளில் நடைபெற்றுவரும் இந்தியப் பள்ளிகளை மூடும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. கடந்த 2008 ஆம் ஆண்டில் இதுபோன்று 72 இந்தியப் பள்ளிகள் நடைபெற்று வந்நிலையில், வெளிப்படையான பாதுகாப்புக் காரணங்களுக்காக அபுதாபியின் கல்விக் கழகம் இத்தகையப் பள்ளிகளை மூட ஆரம்பித்தது.
அந்த வகையில், அபுதாபியில் இயங்கி வரும் லிட்டில் பிளவர் தனியார் பள்ளியில் சுமார் 570 மாணவ மாணவியர் படித்து வருகின்றனர். தற்போது இந்தப் பள்ளியை இந்த வருடத்துடன் மூடிவிடுமாறு அபுதாபி கல்விக் கழகம் அறிக்கை அனுப்பியுள்ளதாக பள்ளி நிர்வாகத் தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
இதனால், இப்பள்ளியில் பயிலும் பிள்ளைகளின் பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு மற்றொரு சிறந்த பள்ளியைத் தேடும் முயற்சியில் இறங்கியுள்ளனர். சிலர் தங்கள் பிள்ளைகளை இந்தியாவில் படிக்க வைக்கலாமா என ஆலோசித்து வருவதாகவும் தெரிய வந்துள்ளது.
இது குறித்து பள்ளி நிர்வாகம் சார்பில், ‘சென்ற ஜூலை மாதம் பள்ளி விடுமுறையின்போது தங்களுக்கு இந்த அறிக்கை வந்ததாகவும் அதனால் செப்டம்பரில் பள்ளி திறந்தவுடன் பெற்றோர்களிடம் இந்த அறிக்கை குறித்த தகவல் அளிக்கப்பட்டது' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், பள்ளித் தலைவியான மேரி தாமஸ், ‘பெற்றோர்களை கல்வி ஆண்டு இறுதிவரை பொறுமையுடன் இருக்கும்படியும், அபுதாபி கல்வி நிர்வாகம் இதற்கான மாற்று ஏற்பாடுகளை செய்து தரும்' எனவும் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications