ஆப்பிள் நிறுவனத்துக்கும் இந்தியாவுக்கும் நெருங்கிய தொடர்பு: மோடியை சந்தித்த சிஇஓ டிம்குக் நெகிழ்ச்சி
சிலிக்கான்வேலி: ஆப்பிள் நிறுவனத்துக்கு இந்தியாவுடன் நெருங்கிய தொடர்புள்ளது என்று ஸ்டீவ் ஜாப்பை நினைவு கூர்ந்து, ஆப்பிள் நிறுவன சி.இ.ஓ டிம்குக் பெருமிதம் தெரிவித்தார்.
அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, சனிக்கிழமை இரவு, நியூயார்க்கில் நடைபெற்ற ஜி-4 நாடுகள் மாநாட்டில் பங்கேற்றார். 10 வருடங்களுக்கு பிறகு இம்மாநாட்டை இந்தியா நடத்தியது. பிரேசில், ஜெர்மனி, ஜப்பான் மற்றும் இந்தியா ஆகியவற்றை உறுப்பு நாடாக கொண்ட ஜி-4 அமைப்பின் மாநாட்டில், இந்தியா உள்ளிட்ட ஜனநாயக நாடுகளுக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இடம் தர வேண்டும் என்று மோடி வலியுறுத்தி பேசினார்.

இதையடுத்து நியூயார்க்கில் இருந்து விமானம் மூலம், அமெரிக்காவின் மேற்குகடற்கரை பகுதிக்கு விரைந்தார். சிலிக்கான்வேலியில் டெஸ்லா மோட்டார்ஸ் நிறுவனத்தை மோடி சுற்றி பார்த்து, விவரங்கள் கேட்டறிந்தார்.
இதையடுத்து, இந்திய நேரப்படி காலை 6 மணிக்கெல்லாம், ஆப்பிள் நிறுவன சி.இ.ஓ டிம் குக்கை சந்தித்தார் மோடி. 15 நிமிடங்கள், நடந்த இந்த சந்திப்பின்போது, இந்தியாவுக்கு தொழில் தொடங்க வருமாறு மோடி அழைப்புவிடுத்தார்.
PM Narendra Modi meets Apple CEO Tim Cook in San Jose, California #ModiInUSA pic.twitter.com/0SNs0GcQcl
— ANI (@ANI_news) September 27, 2015 டிம் குக் கூறுகையில், "இந்தியாவுக்கும், ஆப்பிள் நிறுவனத்துக்கும் நெடுங்காலமாக தொடர்பு உள்ளது. எங்கள் நிறுவன நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ், வாழ்க்கையில் உத்வேகம் பெறுவதற்காக இந்தியாவுக்குதான் சென்றிருந்தார்" என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications