50 ஆண்டுகளுக்குப் பின் ஐநா சபையில் தமிழர்.. 3 மணி நேரம் ‘இசை விருந்து’ தந்த ஏ.ஆர்.ரஹ்மான்
நியூயார்க்: இந்தியாவின் 70வது சுதந்திர தினத்தையொட்டி ஐ.நா. பொதுச்சபை அரங்கில் ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மானின் மூன்று மணி நேர இன்னிசை கச்சேரி நடைபெற்றது.
இந்தியாவின் 70-வது சுதந்திரதினத்தையட்டி ஐ.நா.வில் உள்ள இந்தியாவின் நிரந்தர தூதரகம் சார்பில் நேற்று நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா. பொதுச்சபை அரங்கில் ஆஸ்கார் விருது பெற்ற பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் இன்னிசை கச்சேரி நடைபெற்றது.
ஏ.ஆர்.ரஹ்மான் மேடை ஏறியதுமே பார்வையாளர்கள் பகுதியில் இருந்த பல்வேறு நாடுகளின் தூதரக அதிகாரிகள், இந்தியஅமெரிக்கர்கள் கைதட்டி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

3 மணி நேர இசை நிகழ்ச்சி...
அதனைத் தொடர்ந்து தனது இசைக்குழுவுடன் சேர்ந்து ஏ.ஆ.ரஹ்மான் சுமார் 3 மணி நேரம் இசை நிகழ்ச்சி நடத்தினார். சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வகையில் ஜெய் ஹோ பாடலுக்கு அவர் இசையமைத்தார்.

டிரம்ஸ் சிவமணி...
இது தவிர சுபி பாடல்கள், எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பாடல்களுக்கும் அவர் இசையமைத்தார். ஏ.ஆர்.ரகுமானின் 2 சகோதரிகளும், பிரபல பாடகர் ஜாவித் அலியுடன் இணைந்து பாடினர். ‘டிரம்ஸ்‘ சிவமணி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு டிரம்ஸ் வாசித்தார். ஏ.ஆர்.ரஹ்மானின் இந்த இசை நிகழ்ச்சியை பார்வையாளர்கள் பெரிதும் ரசித்தனர்.

எம்.எஸ்.சுப்புலட்சுமி...
இதேபோல், சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பாக ஐ.நா. சபையால் அழைக்கப்பட்டு எம்.எஸ்.சுப்புலட்சுமி அங்கு கர்நாடக இசை கச்சேரி நடத்தினார். இதன்மூலம் ஐநா சபையில் இசை நிகழ்ச்சி நடத்திய முதல் இந்திய பெண் என்ற பெருமையை அவர் பெற்றார்.

2வது இந்தியர்...
தற்போது அவரைத் தொடர்ந்து ஐ.நா. சபையில் இசை நிகழ்ச்சி நடத்தியுள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான். இதன்மூலம், எம்.எஸ். சுப்புலட்சுமிக்கு பிறகு, இந்தியாவின் சார்பில் ஐ.நா.வில் இன்னிசை கச்சேரி நடத்திய 2-வது இந்தியர் என்ற பெருமையும் அவருக்கு கிடைத்துள்ளது.

தமிழர்கள்...
இதில் குறிப்பிடத்தக்க மற்றொரு அம்சம் என்னவென்றால், இந்தியாவின் சார்பில் ஐ.நா. சபையில் இசை நிகழ்ச்சி நடத்திய எம்.எஸ்.சுப்புலட்சுமி மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் என இருவருமே தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications