"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை
டெல்லி: மத்திய கிழக்கில் மோதல் தீவிரமடைந்துள்ள சூழலில், வளைகுடா நாடுகள் மீது ஈரான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கிடையே ஈரானின் இந்த தாக்குதல்களைக் கடுமையாகக் கண்டித்துள்ள இதர வளைகுடா நாடுகள், இது தொடர்பாக கூட்டாக அறிக்கையை வெளியிட்டுள்ளது. தாக்குதலை நிறுத்தவில்லை என்றால் ஈரான் மீது ராணுவ ரீதியாகப் பதிலடி கொடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கில் மோதல் தொடர்ந்து வருகிறது. 4வது வாரமாக மோதல் தொடரும் சூழலில், தற்போது போர் முடிவுக்கு வருவது போலத் தெரியவில்லை. இஸ்ரேல் தொடர்ந்து ஈரான் மீது தாக்குதல்களை நடத்தி வருகிறது. ஈரானும் விடாமல் பதிலடி கொடுத்து வருகிறது. இதர வளைகுடா நாடுகள் மீதும் ஈரான் தொடர்ச்சியாக தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதனால் அங்குப் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

வளைகுடா நாடுகள்
இதற்கிடையே பொறுத்தது போதும் என வளைகுடா நாடுகள் கொந்தளித்துவிட்டன. ஈரானும் அதன் பினாமிப் படைகளும் நடத்தும் தாக்குதலை இனியும் பொறுத்துக் கொள்ள முடியாது என இதர வளைகுடா நாடுகள் கூட்டாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. சவுதி அரேபியா, ஐக்கிய அமீரகம், குவைத், கத்தார், பஹ்ரைன் மற்றும் ஜோர்டான் ஆகிய ஆறு நாடுகள் இது தொடர்பாக கூட்டாக அறிக்கையை வெளியிட்டுள்ளது.
கூட்டறிக்கை
வெறுமன எதிர்ப்பாக மட்டுமின்றி, மீண்டும் ஈரான் தங்கள் மீது தாக்குதல் நடத்தினால் ராணுவ ரீதியான பதிலடி கொடுக்கப்படும் என எச்சரித்து கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளன. தாக்குதலுக்கு உள்ளாகும் நாடுகள் தனிப்பட்ட முறையிலோ அல்லது கூட்டாகவோ தங்களைத் தற்காத்துக் கொள்ளும் உரிமை சர்வதேச சட்டத்தின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது என்று அந்த ஆறு அரபு நாடுகளும் குறிப்பிட்டுள்ளன. அந்த அறிக்கையில் மேலும், "எங்களின் இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையைப் பாதுகாக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க எங்களுக்கு உரிமை உண்டு" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
தற்காத்துக் கொள்ளும் உரிமை
ஐ.நா. சாசனத்தின் 51வது பிரிவின்படி, ஒரு நாடு தாக்குதலுக்கு உள்ளாகும் போது, பாதுகாப்புச் சபை தேவையான நடவடிக்கை எடுக்கும் வரை, தனிப்பட்ட முறையிலோ அல்லது கூட்டாகவோ தற்காத்துக் கொள்ளும் உரிமை நாடுகளுக்கு உண்டு. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான மோதல்களின் போது, ஈரான் அண்டை நாடுகளில் உள்ள எரிசக்தி ஆலைகள் மற்றும் சுற்றுலாத் தலங்கள் மீது ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதலை நடத்தி வருகிறது. இதனால் அந்த பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்த சூழலில் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.
கண்டிப்பு
ஈரானின் இந்த தாக்குதலைக் கடுமையான கண்டிப்பதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அந்த ரிப்போர்ட்டில் மேலும், "இத்தகைய தாக்குதல்கள், ஈரானால் நேரடியாகவோ அல்லது அதன் பினாமிப் படைகள் மூலமாகவோ அல்லது ஆதரவு பெற்ற ஆயுதக் குழுக்களாலோ நடத்தப்படுகிறது. இது இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு, சர்வதேச சட்டம் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்டம், ஐ.நா. சாசனம் ஆகியவற்றின் கடுமையான மீறல்களாகும்.
பினாமிப் படைகளைத் திரட்டுவது உட்பட, அண்டை நாடுகளை இலக்காகக் கொண்ட தாக்குதல்கள் அல்லது அச்சுறுத்தல்களை ஈரான் உடனடியாகவும், நிபந்தனையின்றியும் நிறுத்த வேண்டும். அண்டை நாடுகளின் ஸ்திரத்தன்மையை அச்சுறுத்திப் பாதுகாப்பைக் குலைக்கும் ஈரானுக்கு விசுவாசமான ரகசிய ஏஜென்ட்டுகள் மற்றும் ஹிஸ்புல்லாவுடன் தொடர்புடைய பயங்கரவாதக் குழுக்களின் செயல்களையும் கடுமையாகக் கண்டிக்கிறோம்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
-
அமெரிக்காவின் அஸ்திவாரமே ஆடிடுமே.. "போரை முடிவுக்கு கொண்டு வர ரெடி.." ஈரான் போட்ட 7 கண்டிஷன்கள் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
எல்லாம் நாடக மேடைதான்.. போர் நிறுத்தத்திற்கு நோ சொன்ன ஈரான்.. கோடிகளில் லாபம் பார்த்த ஜாம்பவான்கள் -
ஈரானின் உச்ச தலைவராக.. என்னை பொறுப்பேற்க சொன்னார்கள்! நான்தான் வேண்டாம் என சொல்லிட்டேன் - டிரம்ப் -
Iran: அமெரிக்காவின் F18 போர் விமானத்தை குருவியை சுடுவது போல சுட்டு வீழ்த்திய ஈரான் ராணுவம்.. வீடியோ! -
இருளில் மூழ்கும் நாடுகள்.. அதிர்ச்சி கொடுக்கும் 'எரிசக்தி அவசரநிலை'.. Energy Emergency என்றால் என்ன? -
கச்சா எண்ணெய் யுத்தம்.. கத்தாரும் சவுதியும் காலி? குட்டி ஆப்ரிக்க நாட்டிற்கு அடித்த மெகா ஜாக்பாட்! -
ட்ரம்ப் சொல்லி வாயை கூட மூடல..ஈரானில் விழுந்த ஏவுகணைகள்! பற்றி எரிந்த எல்பிஐ மையம்..மீண்டும் சிக்கல் -
இந்தியாவிடம் உள்ள கச்சா எண்ணெய் இருப்பு வெறும் 10 நாட்களுக்கு கூட தாங்காது? அதிர்ச்சி RTI தகவல் -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
மத்தியஸ்தம் என பந்தா காட்டிய பாகிஸ்தான்.. அடிக்க வேண்டிய இடத்தில் அடித்த ஈரான்.. ஷெபாஸ் ஷெரீப் ஷாக் -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில்












Click it and Unblock the Notifications