மகளை வைத்து நிர்வாண ஓவியம் வரைந்த சீன தந்தை
பெய்ஜிங்: பெற்ற மகளை நிர்வாணமாக்கி ஓவியம் வரைந்த சீன ஓவியருக்கு எதிர்ப்புகள் அதிகரித்து வருகிறது. ஆனால் இதுவும் கலைதான் நிர்வாணமல்ல என்று அவர்கள் விளக்கம் அளித்துள்ளார்.
சீனாவை சேர்ந்தவர் லீ ஜூவாங்பிங். ஓவியரான இவர் ஆயில் பெயிண்டிங்கில் மிக பிரபலமானவர். அவரது மகள் லீ குவின் (23). பெண் கடவுளின் மாதிரி வடிவமாக தன் மகளை நிர்வாணமாக ஓவியம் வரைவதென்று முடிவு செய்தார் ஜூவாங்பிங். பின் தனது மனைவி மற்றும் மகளிடம் அனுமதி கேட்டுள்ளார்.
அவர்களும் சம்மதிக்கவே மகள் லீ குவினை ஆடையின்றி புலி உள்ளிட்ட விலங்குகளுக்கு அருகிலும், கழுகின் அருகிலும் நிற்க வைத்து அதை ஓவியமாக வரைந்துள்ளார்.
முதலில் இந்த சர்ச்சை அங்குள்ள உள்ளூர் செய்தித்தாள் ஒன்றில் வெளியான கட்டுரை மூலம் பரவியிருக்கிறது. ஒரு தந்தைக்கும் மகளுக்கும் இடையே உள்ள உறவு புனிதமானது. அதை பரிசோதித்து பார்க்கும் இதுபோன்ற செயல்கள் கண்டிக்கதக்கது என இணையதளத்திலும் பல ஆயிரக்கணக்கான கலைஞர்கள் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.
23 வயதுள்ள மகளை நிர்வாணமாக்கி ஓவியம் வரைந்திருப்பது சமூகத்தின் பாலியல் அறநெறிக்கு முரண்பாடானது என அந்நாட்டில் உள்ள பல்வேறு அமைப்புகளும் எச்சரித்துள்ளன.
இது குறித்து கருத்து கூறியுள்ள ஓவியர் லீ, என் மகளை குழந்தை பருவத்தில் குளிப்பாட்டியதற்கும் இதற்கும் எந்த வித்தியாசமும் இல்லை. என் குடும்பத்தில் யாரும் இப்படி குழப்பமடையவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
நானும் ஒரு ஓவியக் கலைஞிதான். எனது தந்தை ஓவியம் வரைவதற்காக மாடலாக நிற்பது புனிதமான ஒன்று என்று அவரது மகளும் அவரது தந்தைக்கு ஆதரவாக கருத்து கூறியுள்ளார். மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை பற்றி எங்களுக்கு கவலையில்லை. ஆனால் நாங்கள் பெருந்தன்மை மிக்கவர்கள் என்றும் அவரது மகள் கூறியுள்ளார்.