மரண ஓலத்திற்கு நடுவே மொராக்கோ.. பூகம்பத்தால் ஏற்பட்ட உயிரிழப்பு 2800ஐ தாண்டியது! நிலைமை ரொம்ப மோசம்
ரபாத்: மொரோக்கோவில் மிக மோசமான பூகம்பம் ஏற்பட்ட நிலையில், அதில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2800ஐ கடந்துள்ளது. அங்கே மீட்புப் பணிகள் 3 நாட்களைக் கடந்தும் தொடர்ந்து நடந்து வருகிறது.
வடக்கு ஆப்பிரிக்காவில் இருக்கும் குட்டி நாடான மொராக்கோவின் மொத்த மக்கள்தொகையே சுமார் 3.7 கோடி தான். இந்த சின்ன நாட்டில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது.

இரவு 11 மணிக்கு இந்த மோசமான நிலநடுக்கம் ஏற்பட்டு இருக்கிறது. ரிக்டர் அளவில் 6.8ஆகப் பதிவான இந்த நிலநடுக்கம் அங்குள்ள முக்கிய சுற்றுலா நகரான மராகேச் என்ற நகரில் இருந்து 72 கிமீ தொலைவில் தென்மேற்கே ஏற்பட்டுள்ளது. அங்கிருந்த மலைப்பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த பயங்கரமான பூகம்பத்தால் அங்கிருந்த கட்டிடங்கள் அப்படியே சரிந்தன.. இரவு நேரத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொதுமக்களால் உடனடியாக வெளியே வர முடியவில்லை. மேலும், மொராக்கோவில் இவ்வளவு வலுவான நிலநடுக்கம் கடந்த பல ஆண்டுகளில் அங்கு ஏற்பட்டதே இல்லை.. இதனால் அங்கிருந்த கட்டிடங்கள் நிலநடுக்கத்தைத் தாங்கும் வகையில் வடிவமைக்கப்படவில்லை. இதனால் கட்டிடங்கள் அப்படியே சரிந்து விழுந்தன. இதுவே பாதிப்பு இந்தளவுக்கு மோசமாகக் காரணமாக அமைந்தது.
மொராக்கோவின் முக்கிய நகரங்களான ரபாத், காசாபிளாங்கா, எஸ்ஸௌயிரா எனப் பல இடங்களில் பாதிப்பு மோசமாக இருந்துள்ளது. 3 நாட்களாக மீட்புப் பணிகள் தொடர்ந்து நடந்து வரும் நிலையில், அங்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 2800ஐ கடந்துள்ளது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடந்து வருவதாலும் படுகாயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் பலர் அனுமதிக்கப்பட்டுள்ளதாலும் உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
இப்போது மீட்புப் பணிகளில் மொராக்கோவுடன் ஸ்பெயின், பிரிட்டன் மற்றும் கத்தார் ஆகிய நாடுகளும் இணைந்துள்ளது. இன்று செப்.12ஆம் தேதி காலை வரை இந்த நிலநடுக்கத்தில் 2862 பேர் உயிரிழந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 2,562 பேர் காயமடைந்துள்ளனர்.
நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் முற்றிலுமாக சீர்குலைந்துள்ளதால் உயிர் பிழைத்தோரை மீட்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அங்குள்ள பல மலைக் கிராமங்கள் நிலநடுக்கம் காரணமாக முற்றிலும் நாசமடைந்துள்ளது. சில இடங்களில் ஒட்டுமொத்தமாக அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
-
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
வில்லிவாக்கத்தில் நானே வேட்பாளர் என நினைத்துக் கொள்ளுங்கள்.. நண்பனுக்காக களம் இறங்கிய சபரீசன் பேட்டி -
கிரவுண்ட் ஜீரோ ரிப்போர்ட்.. தரைதட்டிய களப்பணி.. கிரவுண்டில் திணறும் தவெக.. விஜய்க்கு சிம்ம சொப்பனம்












Click it and Unblock the Notifications