துனிசியாவில் தீவிரவாதிகள் தாக்குதல்: அதிபரின் பாதுகாப்பு வீரர்கள் 11 பேர் பலி!
துணிஸ்: துனிசியா நாட்டில் அதிபரின் பாதுகாப்பு வீரர்கள் சென்ற பஸ்ஸின் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 11 வீரர்கள் உயிரிழந்ததாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
வடக்கு ஆப்பிரிக்க நாடான துனிசியாவில் கடந்த 2011-ம் ஆண்டு மக்கள் புரட்சி ஏற்பட்டது. அதை தொடர்ந்து 30 ஆண்டுகளாக அதிபராக இருந்த சர்வாதிகாரி ஷின் எல் அபிடின் பென்அலி பதவியில் இருந்து தூக்கி எறியப்பட்டார்.

அதை தொடர்ந்து அங்கு ஜனநாயக முறையில் முதன் முறையாக அண்மையில் அதிபர் தேர்தல் நடந்தது. அதில் பெஜி காய்டு எசெப்சி வெற்றி பெற்று அதிபரானார்.
இந்நிலையில் துனிசியா நாட்டு தலைநகர் துணிஸில் உள்ள முகமது வி அவென்யூ என்ற இடத்தில் அந்நாட்டு அதிபரின் பாதுகாப்பு வீரர்கள் ஒரு பஸ்ஸில் சென்றுகொண்டுருந்தனர். அப்போது தீவிரவாதிகள் அந்த பஸ்ஸின் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் 11 பாதுகாப்பு படை வீரர்கள் பலியாகியுள்ளனர். பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது என துனிசியா உள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதலை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் நடத்தி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இருப்பினும் இதுவரை எந்த அமைப்பும் தாக்குதலுக்கு பொறுப்பேற்கவில்லை












Click it and Unblock the Notifications