கனடா நாடாளுமன்றத் தாக்குதல்... டுவிட்டரில் பிரதமர் மோடி வேதனை
Subscribe to Oneindia Tamil
ஒட்டவா: கனடா நாடாளுமன்றத் தாக்குதல் சம்பவம் வேதனை அளிப்பதாக தெரிவித்துள்ளார் பிரதமர் மோடி.
நேற்று கனடா நாடாளுமன்ற வளாகத்திற்குள் துப்பாக்கியுடன் நுழைந்த மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தினர். இதில், நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள தேசிய போர் பாதுகாப்பு நினைவக சின்னத்தின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த பாதுகாப்பு வீரர் ஒருவரும், தாக்குதலில் ஈடுபட்ட மர்ம நபர் ஒருவரும் பலியானார்கள்.

கனடாவின் தலைநகரில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த இத்தாக்குதல் சம்பவம் உலக நாடுகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
இந்நிலையில், இது தொடர்பாக இந்திய பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வேதனை தெரிவித்துள்ளார். அதில் அவர், ‘ஒட்டவா தாக்குதல் சம்பவம் கடுமையான வேதனை அளிக்கிறது. அனைவரின் பாதுகாப்புக்காகவும் நான் பிரார்த்திக்கிறேன்' எனக் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications