மெக்சிகோவில் வெளிநாட்டு பயணிகள் தங்கியுள்ள ஓட்டலில் புகுந்து மர்ம நபர்கள் தாக்குதல்

Subscribe to Oneindia Tamil

மெக்சிகோசிட்டி: மெக்சிகோவில் உள்ள ஓட்டல் ஒன்றில் புகுந்த மர்ம நபர்கள் திடீர் தாக்குதல் நடத்தி அங்கிருந்தவர்களை பிணைய கைதிகளாக சிறை பிடித்து வைத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

மெக்சிகோ நாட்டில் உள்ள இயற்கை எழில் நிறைந்த பியூர்டோ வல்லார்டா என்ற பகுதியில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தங்கும் ஓட்டல் உள்ளது. கடற்கரையை ஒட்டியுள்ள இங்கு பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுற்ருலா பயணிகள் தங்கியுள்ளனர்.

Authorities in Western Mexico Say Armed Men Abducted

இங்கு மர்மநபர்கள் சிலர் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் திடீரென புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும் 16 பேரை பிணைய கைதிகளாக பிடித்துள்ளதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

மெக்சிகோ ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில், ஓட்டல் வளாகத்தில் அதிகாலை 1 மணியளவில் 5 வாகனங்களில் சிலர் அதிரடியாக புகுந்ததாகவும், அங்கு கண்ணில் பட்ட சிலரை துப்பாக்கி முனையில் பிணைய கைதிகளாக பிடித்து வைத்துள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இருப்பினும் அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+