பலுசிஸ்தான் பயங்கர நிலநடுக்கத்துக்கு பலி எண்ணிக்கை 217! புதிய தீவு உருவானது!
குவெட்டா: பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்துக்குப் பலியானோர் எண்ணிக்கை 217 என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 350 பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்த நிலநடுக்கத்தால் கத்வார் கடற்பரப்பில் புதிய தீவு என்றும் உருவாகியிருக்கிறது.
பலுசிஸ்தான் மாநிலத்தில் நேற்று மாலை ஏற்பட்ட நிலநடுக்கம் டெல்லியையும் அதிர வைத்தது. இது ரிக்டர் அளவு கோலில் 7.7 அலகுகள் பதிவாகி இருந்தது.

22 கி.மீ ஆழத்தில்
நிலத்துக்கு அடியில் 22 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தது. தொடக்கத்தில் நிலநடுக்க சேத விவரம் வெளியாகவில்லை..
80...90..பேர் பலி
பின்னர் 80 பேர் பலி, 93 பேர் பலி என்று தகவல் இப்போது அதிர்ச்சியூட்டும் வகையில் கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
217 பேர் பலி
பாகிஸ்தானின் உள்துறை செயலர் ஆசாத் கிலானி தெரிவித்த தகவலின்படி மொத்தம் 208 பேர் பலியான அறிவிக்கப்பட்டது. 350 பேர் படுகாயமடைந்துள்ளனர் என்றும் கூறப்பட்டது. இது தற்போது 217ஆக அதிகரித்துள்ளது.
பலி எண்ணிக்கை உயரும் என அச்சம்
தற்போதைய பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கவே வாய்ப்பிருப்பதாகவும் பாகிஸ்தான் அரசு அதிகாரிகள் கூறியுள்ளனர்.
புதிய தீவு
பலுசிஸ்தானின் கத்வார் கடற்பரப்பில் இந்த நிலநடுக்கத்தினால் புதிய தீவு ஒன்றும் திடுமென உருவாகியிருக்கிறதாம்..
முன்பும் உருவாகி மறைந்த தீவுகள்
இதேபோல் முன்பு பலமுறை இதே பகுதியில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்ட போது இத்தகைய தீவுகள் உருவாவதும் சிறிது காலம் கழித்து அது தானாகவே மறைந்துபோவதும் நடந்துள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications