ஹிந்துக்களுக்கு தகுந்த பாதுகாப்பு: வங்கதேச அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு
டாக்கா: வங்கதேசத்தில் வசித்து வரும் ஹிந்து சிறுபான்மை சமூகத்தினருக்குத் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து தரும்படி, அந்நாட்டு அரசுக்கு டாக்கா உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.
சமீபத்தில் நடந்து முடிந்த வங்கதேச நாடாளுமன்றத் தேர்தலின்போதும், அதனைத் தொடர்ந்தும் நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களில் ஆளும் அவாமி லீக் கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டதாகக் கூறி, ஹிந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் எதிர்க்கட்சியினரால் கடுமையாக தாக்கப்பட்டனர்.
இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக தாமாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது டாக்கா உயர் நீதிமன்றம். விசாரணையின் முடிவில், வங்க தேசத்தில் உள்ள ஹிந்து மதத்தினருக்குத் தேவையான பாதுகாப்பை செய்து தரும்படி அந்நாட்டு அரசுக்கு அந்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், ஹிந்து மதத்தினருக்கு எதிரான தாக்குதலின்போது ஏற்பட்ட சேத விவரம் குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி அரசு அதிகாரிகளுக்கும் உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது.
வன்முறைகளின்போது ஹிந்து மதத்தினருக்கு எதிரான தாக்குதலை ஏன் தடுத்து நிறுத்தவில்லை என்பது குறித்தும், தாக்குதலில் ஈடுபட்டவர்களை ஏன் கைது செய்யவில்லை என்பது குறித்தும் 2 வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு வங்கதேச அரசின் உள்துறைச் செயலாளர், ஐ.ஜி. மற்றும் சம்பந்தப்பட்ட பகுதிகளை சேர்ந்த காவல்துறை ஆணையர்களுக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications