இத்தனை உயிர் பலிகளுக்கு பிறகாவது, உண்மையான ஆபத்தை உணர்வாரா வங்கதேச பிரதமர்?

Subscribe to Oneindia Tamil

டாக்கா: வங்கதேசத்தில் நடைபெறும் வன்முறைகளுக்கு, தனது அரசியல் எதிரிகளான ஜமாத்-இ-இஸ்லாமி மற்றும் வங்கதேச நேஷனல் கட்சிகளை குறை சொல்லி வருகிறார் பிரதமர் ஷேக் ஹசினா. இவர்களின் கைவண்ணம் இருப்பதை புறம் தள்ள முடியாது என்றபோதிலும், முழுக்க இவர்கள்தான் தாக்குதலுக்கு காரணம் என்பதையும் ஏற்க முடியாது.

தலைக்கு மேல் வெள்ளம் போய் கொண்டிருப்பதை ஷேக் ஹசினா உணர வேண்டும் என்பது பல நாட்டு பத்திரிகையாளர்களின் கட்டுரைகளின் சாராம்சமாக உள்ளது.

Bangladesh PM should know the real threat

வங்கதேச தலைநகர் டாக்காவின் குல்‌ஷன் என்ற இடத்தில் வெளிநாட்டு தூதரங்கள் உள்ளன. பாதுகாப்பு மிகுந்த அப்பகுதியில் ஹோலே ஆர்டிசன் பேக்கரி என்ற ஹோட்டல் உள்ளது.

இந்த ஹோட்டலில் வெளிநாட்டினர் உள்பட ஏராளமானவர்கள் தங்கியிருந்தனர். இந்த நிலையில் நேற்று இரவு 9 மணி அளவில் துப்பாக்கி ஏந்திய 5 மர்ம நபர்கள் பலத்த பாதுகாப்பையும் மீறி உள்ளே புகுந்தனர்.

பின்னர் அங்கு சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். வெடிகுண்டுகளும் வீசப்பட்டன. இதனால் அங்கு பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது. ஓட்டலில் தங்கியிருந்தவர்கள் தப்பி ஓட்டம் பிடித்தனர்.

இருந்தும் அவர்களை தப்பி ஓட விடாமல் மர்ம நபர்கள் மடக்கிபிடித்து துப்பாக்கி முனையில் 35 பேரை பிணைக்கைதிகளாக பிடித்தனர். அவர்களில் 20 பேர் வெளிநாடுகளை சேர்ந்தவர்கள்.

இதற்கிடையே ஹைட்டலில் புகுந்து தாக்குதல் நடத்தியதற்கு ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர். தகவல் அறிந்ததும் போலீசாரும், சிறப்பு அதிரடிப்படையினரும் ஹோட்டலை சுற்றி வளைத்தனர். மர்ம நபர்கள் மீது சரமாரி துப்பாக்கி சூடு நடத்தினார்கள். பதிலுக்கு போலீசாரும் சுட்டனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது.

அதில் 2 போலீசார் பரிதாபமாக உயிரிழந்தனர். 26 பேர் காயம் அடைந்தனர். இந்த நிலையில் தீவிரவாதிகளின் பிடியில் சிக்கியிருக்கும் 12 பிணைக் கைதிகள் மீட்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் தவிர மேலும் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் சிறப்பு அதிரடிப்படையினர் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த சில மாதங்களாகவே வங்கதேசத்தில் தீவிரவாத செயல்கள் அதிகரித்துள்ளன. இந்து, கிறிஸ்தவர், மதசார்பின்மைவாதிகள் வரிசையாக படுகொலை செய்யப்பட்டு வருகிறார்கள். ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் இதற்கு பொறுப்பேற்றபடியே உள்ளனர்.

ஆனால், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினாவோ, தனது அரசியல் எதிரிகளான ஜமாத்-இ-இஸ்லாமி மற்றும் வங்கதேச நேஷனல் கட்சிகளை குறை சொல்லி வருகிறார். இவர்களின் கைவண்ணம் இருப்பதை புறம் தள்ள முடியாது என்றபோதிலும், முழுக்க இவர்கள்தான் தாக்குதலுக்கு காரணம் என்பதையும் ஏற்க முடியாது.

தலைக்கு மேல் வெள்ளம் போய் கொண்டிருப்பதை ஷேக் ஹசினா உணர வேண்டும் என்பது பல நாட்டு பத்திரிகையாளர்களின் கட்டுரைகளின் சாராம்சமாக உள்ளது.

ஷேக் ஹசினா உடனடியாக உண்மையான ஆபத்தை கண்டறியாவிட்டால், வங்கதேசம் தொடர்ந்து இதுபோன்ற பாதிப்புகளை சந்திக்கும் என்பது பாதுகாப்பு வல்லுநர்கள் கருத்தாக உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+