வங்கதேசத்தில் இருந்து நீந்தியே இந்தியா வந்த சிறுவன்.. காரணம் கேட்டா ஷாக் ஆகிடுவீங்க!
சாக்லேட் வாங்குவதற்காக வங்கதேசத்தில் இருந்து நீந்தி இந்தியாவிற்குள் நுழைந்த சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார்.
டாக்கா: சாக்லேட் வாங்குவதற்காக வங்கதேசத்தில் இருந்து சர்வதேச எல்லையைத் தாண்டி சிறுவன் ஒருவன் நீந்தியே இந்தியாவிற்குள் நுழைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வங்கதேசம் கோமிலா மாவட்டத்தில் சால்டா நதிக்கரையோரத்தைச் சேர்ந்த அச்சிறுவனின் பெயர் எம்மான் உசேன் எனக் கூறப்படுகிறது. இவர் கடந்த வாரம் (ஏப்ரல் 13ம் தேதி) திரிபுரா மாநிலத்தில் உள்ள சிப்பாஹிஜாலா பகுதியில் உள்ள நதியில் நீந்தி வந்து கொண்டிருப்பதைக் கண்டு அக்கம்பக்கத்தினர் சந்தேகமடைந்தனர். அச்சிறுவன் அப்பகுதியைச் சேர்ந்தவர் இல்லை என்பதால், உடனடியாக இது குறித்து போலீசாருக்கு அவர்கள் தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அச்சிறுவனை பிடித்து விசாரணை நடத்தினர்.

சாக்லேட் வாங்க...
இதில் அச்சிறுவன் வங்கதேசத்தைச் சேர்ந்தவர் என்பதும், சர்வதேச எல்லையைக் கடந்து நீந்தியே இந்தியாவிற்குள் வந்ததும் தெரிய வந்தது. இரண்டு நாடுகளுக்கும் நடுவே போடப்பட்டிருந்த வயர் வேலியில் இருந்த இடைவெளியில் புகுந்து, இந்திய எல்லைக்குள் நுழைந்துள்ளார். சிப்பாஹிஜாலா பகுதியில் உள்ள கடையில் விற்கப்படும் சாக்லேட்டை வாங்குவதற்காக அச்சிறுவன் கூறியுள்ளார்.

கைது
எனினும் இந்தியாவிற்குள் நுழைய போதுமான ஆவணங்கள் அச்சிறுவனிடம் இல்லாத காரணத்தால், சட்டவிரோதமாக இந்தியாவில் நுழைந்ததற்காக எல்லைப் பாதுகாப்புப் படையினர் அச்சிறுவனை போலீசில் ஒப்படைத்தனர். பின்னர் கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்ட அச்சிறுவனிடம், இந்தியாவில் நுழைந்ததற்காக காரணம் பற்றி விசாரிக்கப்பட்டது.

முதன்முறையல்ல..
அப்பொழுது அவர் தான் தனக்கு பிடித்த இந்திய பிராண்ட் சாக்லேட்டை வாங்குவதற்காக நீந்தியே இந்தியாவிற்குள் வந்ததாக கூறியுள்ளார். அதோடு இதற்கு முன்னர் பலமுறை இப்படி நீந்தியே வந்து அந்த சாக்லேட்டை வாங்கிச் சென்றுள்ளதாகவும் அச்சிறுவன் தெரிவித்துள்ளார். இதைக் கேட்டு அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

தொடரும் விசாரணை
முதற்கட்ட விசாரணையில் அச்சிறுவன் உண்மையிலேயே சாக்லேட் வாங்குவதற்காகத்தான் நீந்தி வந்தது தெரிய வந்திருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். எனினும், இதுதான் உண்மைக்காரணமா இல்லை அச்சிறுவன் இந்தியாவிற்குள் அத்துமீறி நுழைந்ததன் பின்னணியில் வேறு சதிச் செயல் காரணங்கள் இருக்கிறதா என தொடர்ந்து விசாரணை நடத்தப்பட இருக்கிறது. இதனால் நீதிமன்றம் அச்சிறுவனை 15 நாட்கள் சிறையில் வைக்க உத்தரவிட்டுள்ளது. விசாரணையின் முடிவில் உண்மைக் காரணம் தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications