Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மாட்டுக்கறி சமைச்சே ஆகணும்.. வங்கதேசத்தில் இந்துக்களை மிரட்டும் கும்பல்! ஓட்டல்களில் மாறும் நடைமுறை

Subscribe to Oneindia Tamil

டாக்கா: வங்கதேசம் நம் நாட்டுடன் மோதலை கடைப்பிடிக்கும் நிலையில் தான் தற்போது அங்கு மாட்டுக்கறி அரசியல் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. அதாவது அனைத்து ரெஸ்டாரண்ட் மற்றும் ஹோட்டல்களில் பரிமாறப்படும் உணவுகளில் மாட்டுக்கறியை சேர்க்க வேண்டும். இல்லாவிட்டால் உணவகங்கள் புறக்கணிப்பு செய்யப்படும் என்று டாக்காவில் இந்து வியாபாரிகள் மிரட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

வங்கதேசத்தில் இடஒதுக்கீட்டுக்கு எதிராக நடந்த வன்முறையை தொடர்ந்து பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்து நம்நாட்டில் தஞ்சமடைந்துள்ளார். தற்போது வங்கதேசத்தில் நோபல் பரிசு வென்ற முகமது யூனுஷ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டுள்ளது.

bangladesh hindu beef

ஷேக் ஹசீனா நம் நாட்டுடன் நல்ல நட்பில் இருந்தார். ஆனால் முகமது யூனுஷ் வந்ததில் இருந்து வங்கேதசம் - இந்தியா இடையேயான உறவு மோசமாகி வருகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் 5 மாதத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு இருநாடுகளின் உறவுகள் மோசமாகி உள்ளது.

இதற்கு வங்கதேசத்தில் உள்ள இடைக்கால அரசின் தலைவரான முகமது யூனுஷ் தான் முக்கிய காரணம். அதாவது அந்த நாட்டில் இந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் மீதான தாக்குதல் மற்றும் கோவில்கள் மீதான தாக்குதலை தடுக்காமல் வேடிக்கை பார்க்கிறார். இஸ்கான் அமைப்பின் முன்னாள் தலைவரான சின்மோய் கிருஷ்ண தாஸ் பிரம்மச்சாரி எனப்படும் சந்தன் குமார் தர் என்பவர் தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்டு உள்ளார்.

அதோடு அந்த நாட்டில் சட்டம் -ஒழுங்கு என்பது இல்லாத நிலை உள்ளது. முகமது யூனுஷ் தலைமையிலான அரசில் அங்கம் வகிக்கும் மாணவர் அமைப்பை சேர்ந்தவர்கள் வைப்பது தான் சட்டம் என்பது போல் உள்ளது. அதோடு அந்த அரசை சேர்ந்த பலரும் பாகிஸ்தானுடன் நட்பு பாராட்டி வருகின்றன. வங்கதேசத்தில் சிறுபான்மையினரின் நலனை இடைக்கால அரசு பாதுகாக்க வேண்டும் என்று நம் நாடு கூறியும் வங்கதேசம் கேட்டதாக தெரியவில்லை.

இதனால் தொடர்ந்து இந்துக்கள் மீதான அடக்குமுறை வங்கதேசத்தில் அரங்கேறி வருகிறது. அந்த வகையில் தான் தற்போது இன்னொரு திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது. அதாவது வங்கதேச தலைநகர் டாக்காவில் உள்ளகுலிஸ்தான் கோலப் ஷா மஜார் அருகே சமீபத்தில் ‛Muslim Bhokta Adhikar Parishad' சார்பில் பேரணி நடத்தப்பட்டது. இந்த பேரணியின்போது இந்து ஹோட்டல், ரெஸ்டாரண்ட்டு உரிமையாளர்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

அதாவது ஹோட்டல், ரெஸ்டாரண்ட்டுகளில் கட்டாயம் மாட்டிறைச்சியை சேர்க்க வேண்டும் என்று கூறியுள்ளனர். அதாவது வங்கதேசத்தில் உள்ள மக்களுக்கு பேவரைட் உணவாக மாட்டிறைச்சி உள்ளது. இதனால் அனைத்து உணவகங்களின் உணவு பட்டியலிலும் மாட்டிறைச்சியை சேர்க்க வேண்டும். இல்லாவிட்டால் அந்தந்த உணவகங்கள் புறக்கணிக்கப்படும் என்று மிரட்டி உள்ளனர்.

வங்கதேசத்தில் கணிசமான அளவில் இந்துக்கள், கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் உள்ளனர். இதில் சில இந்துக்கள் ஹோட்டல், ரெஸ்டாரண்ட்டுகள் நடத்தி வருகின்றனர். அவர்கள் மாடுகளை கடவுளாக பார்ப்பதால் அதன் இறைச்சி சார்ந்த உணவுகளை விற்பனை செய்வது இல்லை. ஆனால் தற்போது அவர்களின் உணவகங்களிலும் மாட்டிறைச்சி சார்ந்த உணவு விற்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தி உள்ளது. அதன்படி சிலர் தற்போது மாட்டிறைச்சி உணவை மெனுவில் சேர்க்க தொடங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+