இஸ்ரேலில் தடுப்பூசி போடும் பணி தொடக்கம்... முதல் தடுப்பூசியை போட்டுக்கொண்ட பிரதமர்!
ஜெருசலேம்: இஸ்ரேலிலும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கி உள்ளது. அந்த நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு முதல் தடுப்பூசியை போட்டுக் கொண்டார்.
கொரோனாவின் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வர கொரோனா தடுப்பூசி ஒன்றே முழுமையான தீர்வு என்பதால், இந்தியாவிலும் இந்த தடுப்பூசியை விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என அனைவரும் எதிர்பார்த்துள்ளனர்.

உலக நாடுகளை இன்றும் கொரோனா தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி ஒன்றே நிரந்தர தீர்வு என்பதால் அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் கொரோனா தடுப்பூசியை பயன்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளன. இந்தியாவிலும் கொரோனா தடுப்பூசி விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் இஸ்ரேல் நாடு பைசர் தடுப்பூசிக்கு அங்கீகாரம் அளித்தது. இதனை தொடர்ந்து அங்கு தடுப்பூசி போடும் பணி நேற்று முதல் தொடங்கியது. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, தடுப்பூசி போடும் பணியை தொடங்கி வைத்து நாட்டின் முதல் தடுப்பூசியை தனக்கு போட்டுக்கொண்டார். அவரைத் தொடர்ந்து சுகாதாரத்துறை அமைச்சர் தடுப்பூசி செலுத்தி கொண்டார். அந்த நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக 40 லட்சம் டோஸ்கள் தடுப்பூசி மருந்து மக்களுக்கு செலுத்தப்பட உள்ளது.
தடுப்பூசி போட்டுக்கொண்டபிரதமர் நேதன்யாகுன் நிருபர்களிடம் கூறியதாவது:-இந்த தினம் இஸ்ரேலுக்கு மிகச் சிறந்த நாள். தனிப்பட்ட முன்மாதிரியாக இருக்கவும், தடுப்பூசி போட மக்களை ஊக்குவிக்கவும், ச தடுப்பூசி போட்டுக்கொண்டேன். இந்த மாத இறுதிக்குள் பல லட்சம் டோஸ்கள் மருந்து வர உள்ளதால், மக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.
உலகின் பல நாடுகள் தடுப்பூசி பயன்பாட்டுக்கு அனுமதி அளித்துள்ள நிலையில் இந்தியாவும் தடுப்பூசிக்கு அனுமதி அளிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications