பின்லேடன் உடலை கடலில் வீசவில்லையாம்.. அமெரிக்காவில் வைத்து எரித்து விட்டதாக புதிய தகவல்!
வாஷிங்டன்: அல் கொய்தா தலைவர் ஒசாமா பின் லேடனின் உடல் கடலில் வீசப்படவில்லை என்றும் அவரது உடலை அமெரிக்காவுக்குக் கொண்டு சென்று அங்கு ரகசிய இடத்தில் வைத்து எரித்துவிட்டதாகவும் ஒரு புதிய தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2011ம் ஆண்டு மே 1ம் தேதி பாகிஸ்தானின் அபோதாபாத் நகரில் பதுங்கி வாழ்ந்து வந்த பின்லேடனை, அமெரிக்கக் கடற்படையின் சீல் பிரிவு கமாண்டோக்கள் அதிகாலையில் வீடு புகுந்து அதிரடியாக தாக்கி சுட்டு வீழ்த்தினர். பின்னர் பின்லேடன் உடலை கடலில் அடக்கம் செய்து விட்டதாகவும் அமெரிக்கா அறிவித்தது.

ஆனாலும் பின்லேடனின் உடல் எங்கே போனது என்பதில் சர்ச்சை நீடித்து வந்தது. இந்த நிலையில் புதிய தகவல் ஒன்று வெளியாகி பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு உளவு ஆய்வு நிறுவனம் ஒன்றின் இமெயில் பின் லேடன் குறித்த புதிய தகவலை வெளிப்படுத்துவதாக உள்ளது. அந்த மெயிலில், அபோதாபாத் சம்பவத்தில் சுட்டு வீழ்த்தப்பட்ட பின்லேடனின் உடலை அமெரிக்க சீல் படையினர் தாங்கள் வந்த விமானத்திலேயே அமெரிக்காவுக்குக் கொண்டு சென்று விட்டனர். அங்கு ஒரு ரகசிய இடத்தில் வைத்து பின்லேடனின் உடல் எரியூட்டப்பட்டு விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்டிராட்பார் என்ற இந்த உளவு ஆய்வு நிறுவனத்தின் இமெயில்களை அனானிமஸ் என்ற ஹேக்கர் குழு ஹேக் செய்து இந்தத் தகவலை வெளிக் கொண்டு வந்துள்ளது. ஸ்டிராட்ஸ்பார் நிறுவனத்திற்க நிழல் சிஐஏ என்ற பெயரும் உண்டு.
ஸ்டிராட்பார் நிறுவனத்தின் 20.7 லட்சம் இமெயில்களையும், முக்கியத் தகவல் பரிமாற்றங்களையும் தாங்கள் ஹேக் செய்து எடுத்துள்ளதாக கடந்த வாரம் இந்த அனானிமஸ் குழு தகவல் வெளியிட்டிருந்தது. அதிலிருந்துதான் பின்லேடனின் உடல் குறித்த புதிய தகவலையும் இந்த அனானிமஸ் வெளியிட்டுள்ளது.
முன்னதாக அபோபாதாபாத் சம்பவத்திற்குப் பின்னர் அமெரிக்க அரசு பின்லேடன் உடலை இஸ்லாமிய முறைப்படி கடலில் அடக்கம் செய்து விட்டதாக கூறியிருந்தது. ஆனால் இந்த ஹேக்கர் குழு கூறும் தகவல் முற்றிலும் மாறாக உள்ளது.
ஸ்டிராட்பார் துணைத் தலைவர் பிரெட் பர்டன் இதுகுறித்து அனுப்பியுள்ள ஒரு மெயிலில், பின்லேடன் உடல் டோவருக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. சிஐஏ விமானத்தில் இது போயுள்ளது. மேரிலான்ட்டில் உள்ள ராணுவப் படையினருக்கான கழகததிற்கு அது எடுத்துச் செல்லப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
அந்த கழகத்தில்தான் பின்லேடன் உடல் எரிக்கப்பட்டதாம். இந்த கழகத்தை 2011ம் ஆண்டு செப்டம்பர் 15ம் தேதியுடன் அமெரிக்க அரசு மூடி விட்டது. என்பது குறிப்பிடத்தக்கது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications