அமெரிக்க அதிபர் தேர்தலில் பாபி ஜிண்டால் போட்டி... பேஸ்புக்கில் வீடியோவுடன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடப்போவதாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பாபி ஜிண்டால் அறிவித்துள்ளார்.
இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை பூர்விகமாக கொண்ட பாபி ஜிண்டால், குடியரசு கட்சி சார்பில் அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ளதாக தனது ஃபேஸ்புக்கில் வீடியோவுடன் பதிவு செய்துள்ளார்.பாபி ஜிண்டால், தற்போது லூசியானா மாகாண கவர்னராக உள்ளது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவில் அடுத்த ஆண்டு நவம்பர் 8-ந்தேதி அதிபர் தேர்தல் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய அதிபர் ஒபாமா, இருமுறை பதவி வகித்துவிட்டதால் 3 வது முறையாக அவர் போட்டியிட இயலாது.
இதனால் ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் அதிபர் கிளிண்டனின் மனைவியும், முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சருமான ஹிலாரி கிளிண்டன் போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர்கள் ஜார்ஜ் எச். டபிள்யு புஷ் மகனும், ஜார்ஜ் டபிள்யு புஷ் சகோதரருமான ஜெஃப் புஷ் போட்டியிடக்கூடும் என தகவல்கள் வெளியாகின.
தற்போது அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் இந்திய அமெரிக்கரான பாபி ஜிண்டால் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.