நைஜீரிய கிராமத்தில் புகுந்து போகோஹராம் தீவிரவாதிகள் வெறித்தனம்..துப்பாக்கிச் சூட்டில் 97 பேர் பலி..

Subscribe to Oneindia Tamil

நைஜீரியா: வடகிழக்கு பகுதியில் உள்ள போர்னோ மாநிலத்தின் தலைநகரான மைதுகிரியில் நேற்று போகோ ஹராம் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 97 பேர் பலியாகினர்.

மைதுகிரியின் குகாவா கிராமத்தில் உள்ள மசூதியில் புகுந்த
தீவிரவாதிகள் அங்கு ரமலான் தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டனர்.

bokoharam

அப்போதும் வெறி அடங்காத போகோ ஹாரம் தீவிரவாதிகள், கிராமத்தில் உள்ள வீடுகளுக்குள் புகுந்து, அங்கிருந்த குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரையும் வெளியே இழுத்து வந்து துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர்.

போகோ ஹராம் தீவிரவாதிகள் நடத்திய இந்த கண்மூடித்தனமான தாக்குதலில் 97 பேர் பலியாகினர். பலியானவர்களின் உடல்கள் சம்பவ இடத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளன. படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+