For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நைஜீரிய கிராமத்தில் புகுந்து போகோஹராம் தீவிரவாதிகள் வெறித்தனம்..துப்பாக்கிச் சூட்டில் 97 பேர் பலி..

Google Oneindia Tamil News

நைஜீரியா: வடகிழக்கு பகுதியில் உள்ள போர்னோ மாநிலத்தின் தலைநகரான மைதுகிரியில் நேற்று போகோ ஹராம் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 97 பேர் பலியாகினர்.

மைதுகிரியின் குகாவா கிராமத்தில் உள்ள மசூதியில் புகுந்த
தீவிரவாதிகள் அங்கு ரமலான் தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டனர்.

bokoharam

அப்போதும் வெறி அடங்காத போகோ ஹாரம் தீவிரவாதிகள், கிராமத்தில் உள்ள வீடுகளுக்குள் புகுந்து, அங்கிருந்த குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரையும் வெளியே இழுத்து வந்து துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர்.

போகோ ஹராம் தீவிரவாதிகள் நடத்திய இந்த கண்மூடித்தனமான தாக்குதலில் 97 பேர் பலியாகினர். பலியானவர்களின் உடல்கள் சம்பவ இடத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளன. படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

English summary
Nearly 100 people have been killed in an attack on mosques and houses in a village in north-eastern Nigerian by suspected Boko Haram militants
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X