ராணுவ சர்வாதிகார ஆட்சியில் நிர்வாணமாக்கி கொடுமைப்படுத்தப்பட்டேன்: பிரேசில் ஜனாதிபதி தில்மா
பியூனஸ் அயர்ஸ்: ராணுவ சர்வாதிகார ஆட்சியில் தாம் நிர்வாணமாக்கப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்டதாக பிரேசில் ஜனாதிபதி தில்மா ரூசெப் உருக்கமான தகவல் வெளியிட்டு உள்ளார்.
தென் அமெரிக்க நாடான பிரேசில் நாட்டில் 1964-ம் ஆண்டு முதல் 1985-ம் ஆண்டு வரை ராணுவ சர்வாதிகார கொடுங்கோல் ஆட்சி நடைபெற்றது. அக் காலகட்டத்தில் சர்வாதிகார ஆட்சியை எதிர்த்த மக்களை ராணுவம் கைது செய்து கொடுமைப்படுத்திக் கொன்றது.

பலர் சிறையில் அடைக்கப்பட்டு கொடுமை படுத்தப்பட்டார்கள். பின்னர் மக்கள் ஆதரவுடன் ராணுவ ஆட்சி தூக்கி வீசப்பட்டது. ஜனநாயக ஆட்சி மலர்ந்தது. அதன் பின்னர் இடதுசாரிகள் தேர்தலின் மூலம் ஆட்சியதிகாரத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
கடந்த தேர்தலிலும் இடதுசாரி கொள்கை கொண்ட தில்மா ரூசெப் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இப்போது பிரேசில் ஜனாதிபதியாக இருக்கும் தில்மா ரூசெப் சர்வாதிகார கொடுங்கோல் ஆட்சியை எதிர்த்தார்.
இதனால் இவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ராணுவ சர்வாதிகார ஆட்சியில் நடைபெற்ற கொடுமைகளை அறிய தேசிய உண்மை கண்டறியும் விசாரணைக்குழு அமைக்கப்பட்டது.
இக் குழு பிரேசில் முழுவதும் சென்று விசாரணை நடத்தி அந்நாட்டு அரசிடம் 2 ஆயிரம் பக்கங்கள் கொண்ட அறிக்கையை தாக்கல் செய்தது.
இது பற்றி பிரேசில் ஜனாதிபதி தில்மா ரூசெப் அந்நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் கூறியுள்ளதாவது:
பிரேசிலில் கடந்த 1964-ம் ஆண்டு முதல் 1985-ம் ஆண்டு வரை நடைபெற்ற சர்வாதிகார ஆட்சி வீழ்ந்து நாம் இப்போது சுதந்திரமாக உள்ளோம்.
சர்வாதிகார ஆட்சியில் மக்கள் சித்ரவதை செய்யப்பட்டனர். ராணுவத்தால் பலர் சித்ரவதை செய்யப்பட்டனர். குற்றம் செய்தவர்கள் நீதி முன்பு நிறுத்தப்பட வேண்டும்.
கடந்த காலங்களில் இருந்து நாம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். கொடுங்கோல் ஆட்சியில் நான் மிகவும் பாதிக்கப்பட்டேன்.
1970ஆம் ஆண்டு எனக்கு 22 வயது. அந்த ஆட்சியை எதிர்த்தேன் என்ற ஒரே காரணத்துக்காக நான் கைது செய்யப்பட்டேன். சிறையில் வைத்து என்னை நிர்வாணமாக்கி அடித்து கொடுமைப்படுத்தினார்கள். கரண்ட் ஷாக் கொடுத்தனர். பாலியல் ரீதியா துன்புறுத்தினர்.
என்னையும், எனது 2 குழந்தைகளையும் சிறைக்கு இழுத்துச் சென்றார்கள். அங்கும் என்னை குழந்தைகள் முன்பு மிருகத்தனமாக அடித்தார்கள். இதில் நான் பலத்த காயம் அடைந்தேன். காயங்களில் இருந்து வழிந்த ரத்தம் உடல் முழுவதும் வழிந்து காய்ந்து போய்விட்டது.
இதைபார்த்து என்னுடன் இருந்த எனது 4 வயது மற்றும் 5 வயது வயது குழந்தைகள் என்னை பார்த்து "அம்மா உன் உடல் ஏன் இப்படி நிறம் மாறி இருக்கிறது" என்று அப்பாவியாக கேட்டது இப்போதும் என்னால் மறக்க முடியவில்லை.
இதேபோல் எனது கர்ப்பிணி சகோதரியும், அவரது கணவரும் சித்ரவதை செய்யப்பட்டனர். அவரது கட்சி உறுப்பினர், அவரது கண்முன்னால் அடித்து கொல்லப்பட்டார். இந்த சித்ரவதைகளுக்கு யார் எல்லாம் காரணம் என்று எனக்கு நன்றாக தெரியும்.
அவரும், அவரது குடும்பத்தினரும் இப்போது சுதந்திரமாக சுற்றுகிறார்கள். அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு தில்மா ரூசெப் கூறினார்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த பிரேசில் மனித உரிமை அமைப்பின் இயக்குனர் மரியா லாரா கனியு, விசாரணைக்குழு அறிக்கையில் மனித உரிமைகளை மீறி சித்ரவதை செய்ததாக 377 பேர் குற்றவாளிகள் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதற்கான ஆதாரம் உள்ளது. எனவே குற்றவாளிகள் தப்ப முடியாது என்றார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications