இந்தியர் விற்ற லாட்டரிக்கு ரூ. 2,550 கோடி பரிசு
கலிபோர்னியா:அமெரிக்க லாட்டரியில் இந்தியர் விற்ற சீட்டுக்கு ரூ.2,550 கோடி பரிசு விழுந்துள்ளது.
அமெரிக்காவில் லாட்டரி இன்னும் நடைமுறையில் உள்ளது. அதில் சமீபத்தில் 425 மில்லியன் டாலர்கள் (ரூ.2,550 கோடி) பரிசு தொகைக்கான ஜாக்பாட் குலுக்கல் நடந்தது.
இந்த பரிசுக்குரிய சீட்டை ஒரே நபர் வாங்கி இருக்கிறார் என்றும், கலிபோர்னியா மாகாணத்தில் சான் ஜோஸ் நகரில் இருக்கும் மில்பிதாஸ் பகுதியில் கடை நடத்தி வரும் இந்தியர் பர்மீத் சிங்கின் மகன் குல்விந்தர் சிங் என்பவர்தான் இந்த அதிர்ஷ்ட சீட்டை விற்று இருக்கிறார் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த சீட்டை வாங்கிய அதிர்ஷ்டசாலி யார் என்பது இன்னும் தெரியவில்லை.
இந்த சீட்டை விற்றதன் மூலம் குல்விந்தர் சிங்கிற்கு கமிஷனாக ரூ.6 கோடி கிடைக்கும். குடும்பத்தினரை சந்திக்க அவர் டெல்லிக்கு வந்து இறங்கிய பிறகே இந்த தகவல் தெரியவந்தது.












Click it and Unblock the Notifications