Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ட்ரூடோ சொன்னது பொய்தானா? காலிஸ்தானி கொலையில்.. இந்தியாவுக்கு தொடர்பில்லை! கனடா ஆணையம் ரிப்போரட்

Subscribe to Oneindia Tamil

டொரண்டோ: கனடாவில் கடந்த 2023ம் ஆண்டு கொல்லப்பட்ட காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜர் கொலையில் இந்தியாவுக்குத் தொடர்பு இருப்பதாக கனட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சில பகீர் குற்றச்சாட்டுகளைச் சுமத்தியிருந்தார். இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், நிஜ்ஜர் கொலையில் வெளிநாடுகளின் தொடர்பு இருப்பது போலத் தெரியவில்லை என்று அந்நாட்டு ஆணையமே இப்போது அறிக்கை சமர்ப்பித்துள்ளது.

இந்தியர்கள் அதிகம் வசிக்கும் நாடுகளில் ஒன்று கனடா. குறிப்பாக அங்குப் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் அதிகளவில் வசித்து வருகிறார்கள். அதேநேரம் அங்கு காலிஸ்தான் பயங்கரவாதிகளும் வெளிப்படையாகவே செயல்பட்டு வருகிறார்கள்.

canada justin trudeau world

காலிஸ்தான் பயங்கரவாதிகள்:

நமது நாட்டில் காலிஸ்தான் பயங்கரவாதி இயக்கங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளன. ஆனால், கனடாவில் காலிஸ்தான் பயங்கரவாதிகளுக்குத் தடை இல்லை.. இதனால் காலிஸ்தான் பயங்கரவாதிகள் சுயமாக இயங்கி வருகிறார்கள். அவர்கள் அங்கு வசிக்கும் இந்தியர்களை மூளைச்சலவை செய்து தவறான பாதைக்கு அழைத்துச் செல்வதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

ஜஸ்டின் ட்ரூடோ:

இதற்கிடையே கடந்த ஜூன் 2023ம் ஆண்டு கனடாவில் வசித்து வந்த ஹர்தீப் சிங் நிஜ்ஜர் என்பவர் சுட்டுக்கொல்லப்பட்டார். காலிஸ்தான் பயங்கரவாதியாக அறியப்படும் ஹர்தீப் சிங் நிஜ்ஜர் இந்தியாவில் பல குற்ற செயல்களுக்குக் காரணமானவர் என்று அறியப்படுகிறார். ஹர்தீப் சிங் கனடாவில் குடியுரிமை பெற்ற நபர் ஆவார். இதற்கிடையே நிஜ்ஜர் கொலைக்கும் இந்திய ஏஜெண்டுகளுக்கு தொடர்பு இருப்பதாக சில மாதங்களுக்கு முன்பு அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றஞ்சாட்டினார். இது குறித்து நம்பகமான தகவல்கள் தன்னிடம் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

இருப்பினும், இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்த இந்தியா, ஆதாரங்களை வெளியிடுமாறு வலியுறுத்தியது. ஆனால், ஆதாரங்களை வெளியிட மறுத்த ட்ரூடோ, தொடர்ந்து இந்தியா மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை மட்டும் சுமத்தி வந்தார். இதனால் இரு நாட்டு உறவுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. இரு நாடுகளும் தங்கள் தூதர்களையும் கூட திரும்பப்பெற்றுக்கொண்டன. இது ஒரு பக்கம் இருக்க நிஜ்ஜர் கொலை தொடர்பாக விசாரிக்கக் கனடா நாட்டின் அரசே ஆணையம் ஒன்றை அமைத்திருந்தது.

தொடர்பு இல்லை:

அந்த ஆணையத்தின் அறிக்கை குறித்த தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளன. அதில் ஹர்தீப் சிங் நிஜ்ஜர் கொலையில் வெளிநாட்டு அரசுகளுக்குத் தொடர்பு இருப்பது போல இருப்பதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்று கூறப்பட்டுள்ளது. 'Public Inquiry Into Foreign Interference in Federal Electoral Processes and Democratic Institutions' என்ற தலைப்பில் 123 பக்கங்களைக் கொண்ட இந்த அறிக்கையில் பல்வேறு தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

அறிக்கை சொல்வது என்ன:

அந்த அறிக்கையில் ஒரு இடத்தில் ஹர்தீப் சிங் நிஜ்ஜர் கொல்லப்பட்டது குறித்து இந்தியா தவறான தகவலைப் பரப்பியதாகக் கூறப்பட்டுள்ளது. அதேநேரம் அந்த கொலையில் ஒரு வெளிநாட்டுச் சக்திக்கு உள்ள தொடர்பைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறியுள்ளது. அந்த ரிப்போட்டில், "ஹர்தீப் சிங் நிஜ்ஜர் கொலையில் இந்தியாவின் தொடர்பு இருப்பதாக (இது தொடர்பான உறுதியான ஆதாரங்கள் இல்லை) பிரதமர் [ஜஸ்டின் ட்ரூடோ] கூறியதைத் தொடர்ந்து சிலர் நாட்டில் திட்டமிட்டு தவறான தகவல்கள் பரப்பினர். இது குறித்து விசாரிக்கப்பட வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+