லிபியாவில் ஐ.எஸ் அட்டூழியம்: கார் குண்டுத் தாக்குதலில் 32 ராணுவ வீரர்கள் பலி
திரிபோலி: லிபியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் நிகழ்த்திய கார் குண்டு தாக்குதலில் அந்நாட்டின் ஐக்கிய அரசுப் படையைச் சேர்ந்த 32 வீரர்கள் உயிரிழந்தனர்.
இதுகுறித்து லிபியாவின் ராணுவ அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், லிபியாவின் ஷிர்தி நகரத்தின் பெரும்பாலான பகுதிகள் ஐ.எஸ். தீவிரவாதிகள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். மேலும் ஷிர்தி நகரின் மேற்கு பகுதியை கைப்பற்ற ஐ.எஸ் தீவிரவாதிகள் கடுமையான முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

அவர்களின் முன்னேற்றத்தை தடுப்பதற்காக, லிபியாவின் ஐக்கிய அரசுப் படைகள் ஐ,எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக அதிரடியாக தாக்குதலை நிகழ்த்தி வருகிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம் இருதரப்பினருக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச் சண்டை மற்றும் வெடிகுண்டு தாக்குதல்கள் நடைபெற்றன. இதற்கிடையே,, ஷிர்தி பகுதியில் ஐ. எஸ் தீவிரவாதிகள் கார் குண்டு தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில், ஐக்கியப் படையைச் சேர்ந்த 32 வீரர்கள் உயிரிழந்தனர். 50 பேர் காயமடைந்தனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications