வங்கதேசத்தில் 4 பேருடன் சென்ற சரக்கு விமானம் கடலில் விழுந்து விபத்து: விமானி பலி
டாக்கா: வங்கதேசத்தில் சிறிய ரக சரக்கு விமானம் ஒன்று வங்கக் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானி பலியானார்.
வங்கதேசத்தின் தென்கிழக்கு பகுதியில் உள்ள காக்ஸ் பஜார் மாவட்டத்தில் இருந்து மீன் ஃபிரைக்களை ஏற்றிக் கொண்டு சிறிய ரக சரக்கு விமானம் ஒன்று இன்று காலை ஜெஸ்ஸோர் மாவட்டத்திற்கு கிளம்பியது.

விமானத்தில் விமானி, துணை விமானி, 2 சிப்பந்திகள் இருந்தனர். இந்நிலையில் விமானம் கிளம்பிய சிறிது நேரத்தில் வங்கக் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் விமானி பலியானார், துணை விமானி படுகாயம் அடைந்தார். படுகாயம் அடைந்த துணை விமானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 2 சிப்பந்திகளை காணவில்லை. அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது.
விமானம் விபத்துக்குள்ளான காரணம் இதுவரை தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications