ரஷ்யாவின் அடுக்குமாடிக் குடியிருப்பில் சிலிண்டர் வெடித்து தீவிபத்து - 5 பேர் பரிதாப பலி; தேடுதல் தீவ
மாஸ்கோ: ரஷ்யாவில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் எரிவாயு கேஸ் சிலிண்டர் வெடித்து சிதறியதில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ரஷ்யாவின் தென்பகுதியில் உள்ள வோல்கோகிராட் நகரில் உள்ள 9 மாடிகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று திடீரென கேஸ் சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.
இதனால், கண்ணிமைக்கும் நேரத்தில் பரவிய தீயால் அந்த இடமே புகைமண்டலமானது. சிறிது நேரத்தில் கட்டிடத்தின் சில பகுதிகள் இடிந்து விழுந்தன.

வெளியேற முடியாமல் தவிப்பு:
அங்கிருந்த வீடுகளில் வசித்த பலர் வெளியேற முடியாமல் உள்ளே சிக்கிக்கொண்டனர். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
போராடி அணைக்கப்பட்ட தீ:
அவர்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்து, மக்களை பாதுகாப்பாக மீட்டனர். இருப்பினும், இந்த விபத்தில் சிக்கிய 5 பேர் உயிரிழந்தனர். காயமடைந்த 10 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
பலி எண்ணிக்கை உயரலாம்:
கட்டிடத்தின் அடிப்பகுதியில் ஏற்பட்டுள்ள இடிபாடுகளுக்குள் பத்துக்கும் மேற்பட்டோர் சிக்கியிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.
குறைந்த பாதுகாப்பு:
ரஷ்யாவில் குடியிருப்பு கட்டிடங்கள் மிகவும் பழமையானதாக இருப்பதும், பாதுகாப்பு நடவடிக்கைகளில் அலட்சியம் காட்டப்படுவதுமே இதுபோன்ற விபத்துக்கு காரணமாகிறது என கூறப்படுகிறது. சமீபத்தில் ரஷியாவில் மனநோய் காப்பகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 23 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications