என்னை எப்படி உன் பூனை கடிக்கலாம்: காதலனை கடித்துக் குதறிய இளம்பெண்
பெர்லின்: ஜெர்மனியில் தன்னை பூனை கடித்த கோபத்தில் அதன் உரிமையாளரான தனது காதலரை 26 வயது பெண் ஒருவர் அடித்து, கடித்துக் குதறியுள்ளார்.
ஜெர்மனி நாட்டில் உள்ள ஹேகன் நகரைச் சேர்ந்த 26 வயது லாரா(பெயர் மாற்றப்பட்டுள்ளது) 39 வயது கெவினை(பெயர் மாற்றப்பட்டுள்ளது)காதலித்து வருகிறார். லாராவும், கெவினும் ஒரே வீட்டில் வசித்து வருகிறார்கள். கெவின் பூனை ஒன்றை வளர்த்து வருகிறார். அந்த பூனை நேற்று காலை லாராவை கடித்துவிட்டது.
இதனால் ஆத்திரம் அடைந்த லாரா பூனையை அடக்க முயன்றும் முடியவில்லை. இதையடுத்து பூனை தொடர்பாக லாரா மற்றும் கெவின் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றி லாரா கெவினை கண்டபடி அடித்ததுடன் கடித்துக் குதறியுள்ளார்.
இதையடுத்து கெவின் போலீசாருக்கு போன் செய்ய முயன்றார். லாராவோ அவரது செல்போனை பறித்துக் கொண்டார். ஒரு வழியாக லாராவின் பிடியில் இருந்து தப்பித்த கெவின் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
போலீசார் வந்து கெவினை மருத்துவமனையில் அனுமதித்தனர். கெவினை கடித்த லாராவை அழைத்துச் சென்று அறிவரை வழங்கினர். லாரா 10 நாட்கள் அந்த வீட்டுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.