காவிரியை பாய வைப்போம்.. போராட தயாராகு தோழா.. லண்டனில் களம் இறங்கும் தமிழர்கள்!
Recommended Video

லண்டன்: காவிரிக்காக லண்டனில் வரும் 14ம் தேதி தமிழர்கள் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருகின்றன. பிரதான எதிர்க்கட்சியான திமுக தொடர்ந்து மறியல் போராட்டங்களை நடத்தி வருகிறது. தமிழகத்தில் நேற்று திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அழைப்புவிடுத்த பந்த் மக்கள் ஆதரவுடன் வெற்றி பெற்றது.

இந்த நிலையில், லண்டன் வாழ் தமிழர்களும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, தமிழ் புத்தாண்டான சித்திரை 1ம் தேதி (ஏப்ரல் 14), போராட்டம் நடத்த அழைப்புவிடுத்துள்ளனர்
லண்டன் நேரப்படி, அன்று மதியம் 1 மணி முதல் மாலை 4 மணிவரை போராட்டம் நடைபெற உள்ளது. லண்டனிலுள்ள ஈஸ்ட் ஹாம் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. காளையை பாய வச்சது நாம்தான்.. காவிரியை பாய வைக்க வேண்டியதும் நாம் தான்.. போராட தயாராகு தோழா.. என்பது போன்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டர்களை கொண்டு லண்டன்வாழ் தமிழர்கள் தீவிர பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications