ஜப்பான் கப்பலில் உள்ள 138 இந்தியர்களை மட்டும் மீட்க முடியாது.. மத்திய அரசு
Recommended Video
டெல்லி: ஜப்பான் கப்பலில் ஆயிரக்கணக்கான மக்கள் இருக்கும் போது 138 இந்தியர்களை மட்டும் மீட்க முடியாது என மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார்.
ஹாங்காங்கிலிருந்து 3700-க்கும் மேற்பட்டோருடன் ஒரு கப்பல் ஜப்பான் சென்று கொண்டிருந்தது. கொரோனா பீதியால் அந்த கப்பல் யோக்கோஹாமா துறைமுகம் அருகே நடுக்கடலில் பிப்ரவரி 5-ஆம் தேதி நிறுத்தப்பட்டுள்ளது.
இந்த கப்பலில் உள்ள 135 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்தது.

கோரிக்கை
இந்த கப்பலில் 138 இந்தியர்கள் உள்ளனர். கொரோனா பாதித்த மக்கள் தனிமைப்படுத்தப்படாததால் தங்களை இந்திய அரசு உடனடியாக மீட்க வேண்டும் என இந்தியர்கள் கோரிக்கை விடுத்த வண்ணம் உள்ளனர். மேலும் கப்பலில் சுத்தம் கடைப்பிடிக்கப்படாததால் கொரோனா பரவும் அபாயம் இருப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

காப்பாற்றுதல்
இதனால் தங்களை காப்பாற்ற கோரி மேற்கு வங்கத்தை சேர்ந்த பினய் குமார் பிரதமர் மோடிக்கும் மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜிக்கும் வீடியோ மூலம் வேண்டுகோள் விடுத்தார். மேலும் தாங்கள் உயிரோடு இருப்போமா இல்லையா என தெரியவில்லை என கண் கலங்கினார். அதுபோல் கப்பலில் உள்ள மதுரையைச் சேர்ந்த அன்பழகனும் தங்களை காப்பாற்றுமாறு வீடியோ வெளியிட்டுள்ளார்.

வெளியுறவுத் துறை அமைச்சர்
அதில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, திமுக தலைவர் ஸ்டாலின், நடிகர்கள் ரஜினிகாந்த் , கமல்ஹாசன், அஜித், விஜய் உள்ளிட்டோரையும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இந்த நிலையில் இந்தியர்கள் பாதுகாப்பாக மீட்கப்படுவர் என்றும் அவர்களோடு ஜப்பானுக்கான இந்திய தூதரகம் தொடர்பில் உள்ளது என வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்திருந்தார்.

மீட்க முடியாது
இந்த நிலையில் சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறுகையில், ஜப்பான் அரசின் விதிகளின்படி கப்பலில் உள்ள மக்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். வைரஸ் பாதித்தவர்கள் ஜப்பான் அதிகாரிகளால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மற்றவர்கள் பிப்ரவரி 19-ஆம் தேதி வரை தனிமைப்படுத்தப்படுவர். கப்பலில் ஆயிரக்கணக்கானோர் உள்ள நிலையில் எங்கள் மக்களை மட்டும் மீட்க வேண்டும் என நாம் சொல்ல முடியாது என தெரிவித்தார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications