சார்லி ஹெப்டோ தாக்குதல் எதிரொலி: நபிகள் நாயகத்தின் கார்டூன் வெளியிட டென்மார்க் நாளிதழ் அச்சம்
கோபன்ஹேகன்: சார்லி ஹெப்டோ பத்திரிக்கை அலுவலகம் தாக்கப்பட்டதையடுத்து நபிகள் நாயகத்தின் கார்டூன்களை வெளியிடுவது இல்லை என்று டென்மார்க்கைச் சேர்ந்த ஜில்லேண்ட்ஸ்-போஸ்டன் நாளிதழ் முடிவு செய்துள்ளது.
கடந்த 2005ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30ம் தேதி டென்மார்க்கைச் சேர்ந்த நாளிதழான ஜில்லேண்ட்ஸ்-போஸ்டன் நபிகள் நாயகத்தை கிண்டல் செய்து 12 கார்டூன்களை வெளியிட்டது. அந்த கார்டூன்களை தான் பிரான்ஸைச் சேர்ந்த சார்லி ஹெப்டோ வார பத்திரிக்கை 2006ம் ஆண்டு வெளியிட்டு சர்ச்சையில் சிக்கியது. அதன் பிறகு நபிகள் நாயகத்தை கிண்டல் செய்து பல கார்டூன்களை வெளியிட்டதால் சார்லி ஹெப்டோ அலுவலகம் புதன்கிழமை தாக்கப்பட்டது.

இந்த சம்பவத்தை அடுத்து சார்லி ஹெப்டோ வெளியிட்ட நபிகள் நாயகத்தின் கார்டூன்களை டென்மார்க்கைச் சேர்ந்த பல பிரபல நாளிதழ்கள் வெளியிட்டுள்ளன. ஆனால் இந்த கார்டூன் விவகாரத்தை துவங்கி வைத்த ஜில்லேண்ட்ஸ்-போஸ்டன் சார்லி ஹெப்டோ கார்டூன்களை தங்கள் நாளிதழில் வெளியிடப் போவது இல்லை என்ற முடிவுக்கு வந்துள்ளது.
இது குறித்து ஜில்லேண்ட்ஸ்-போஸ்டனில் கூறியிருப்பதாவது,
தீவிரவாதிகள் தாக்குவார்கள் என்ற பயத்தில் தான் 9 ஆண்டுகளாக உள்ளோம். அதனால் தான் சார்லி ஹெப்டோவின் கார்டூன்களை எங்கள் நாளிதழில் மறுபிரசுரம் செய்ய மாட்டோம். வன்முறைக்கு அடிபணிகிறோம் என்பது எங்களுக்கு தெரிகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications