கடலில் மூழ்கிய சிரியா குழந்தை பற்றி மனிதாபிமானமற்ற கார்ட்டூன்.. மீண்டும் சர்ச்சையில் சார்லி ஹெப்டோ
பாரீஸ்: தீவிரவாதிகள் தாக்குதலுக்கு அஞ்சி அகதிகளாக வெளியேறிய சிரியா நாட்டு குடும்பத்தை சேர்ந்த சிறு குழந்தை கடலில் மூழ்கி பலியான சம்பவத்தை கேலி செய்யும்வகையில் பிரெஞ்சு இதழான சார்லி ஹெப்டோ கார்ட்டூன் வெளியிட்டுள்ளது.
நபிகள் நாயகத்தை பற்றி கேலி சித்திரம் வெளியிட்டதை கண்டித்து, தீவிரவாதிகள் சிலர் பிரெஞ்சு இதழான 'சார்லி ஹெப்டோ' அலுவலகம் புகுந்து, 12 ஊழியர்களை சுட்டு கொலை செய்தனர். இந்த சம்பவம் கருத்துரிமைக்கு எதிரான தாக்குதலாக உலகம் முழுவதிலுமிருந்து கண்டனங்களை சம்பாதித்தது. இந்த தாக்குதல் மூலம், உலக அளவில் சார்லி ஹெப்டோ பத்திரிகை அறியப்பட்டுவிட்டது.

இந்நிலையில்தான், அப்பத்திரிகை வெளியிட்டுள்ள ஒரு கேலி சித்திரம், இஸ்லாமியர்களை மட்டுமல்லாது, மனித நேயம் கொண்ட அனைவரையும் கோபப்படுத்தியுள்ளது.
ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் தாக்குதலால் பாதிக்கப்பட்டு, ஐரோப்பாவுக்கு தஞ்சமடைய படகில் பயணித்த ஒரு குடும்பம் நீரில் மூழ்கி இறந்தது. அந்த குடும்பத்தின் 3 வயது குழந்தை கவிழ்ந்தபடி கடலோரத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்டது. இந்த புகைப்படம், உலகம் முழுவதிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்துதான், அகதிகளை தங்கள் நாட்டுக்கு வரவேற்க ஐரோப்பிய நாடுகள் பலவும் முன்வந்தன.
அகதிகள் போர்வையில் ஐரோப்பாவுக்குள் தீவிரவாதிகள் நுழையலாம் என்று போப் ஆண்டவர் எச்சரிக்கைவிடுத்திருந்தார். இந்நிலையில், சார்லி ஹெப்டோ எரியும் கொள்ளியில் எண்ணையை ஊற்றுவது போன்ற கார்டூன்களை வெளியிட்டு தனது வெறியை பறைசாற்றியுள்ளது.
ஒரு கார்ட்டூனில், ஏசு கிறிஸ்து போன்ற தோற்றத்தில் ஒருவர் கடல் நீரின் மீது நடந்து வருவதைபோலவும், அருகே, சிரியா நாட்டு குழந்தை கடலில் மூழ்கிய போட்டோவும் வரையப்பட்டுள்ளது. மேலும், கிறிஸ்தவர்கள் நீரில் மேல் நடக்கும் வல்லமை கொண்டவர்கள் என்றும், இஸ்லாமிய குழந்தை நீரில் மூழ்கத்தான் முடியும் என்றும் அந்த கார்டூன் விளக்க குறிப்பு கொடுத்துள்ளது.
மற்றொரு கார்டூனில், "சிரியா குழந்தை கவிழ்ந்து கிடப்பதை போன்ற படத்துக்கு பின்புறத்தில், மெக்டொனால்டு உணவக விளம்பர பலகை ஒன்று மிளிர்கிறது. அதில் "2 குழந்தைகளுக்கான சாப்பாடு இப்போது ஒரு சாப்பாட்டின் விலையில் கிடைக்கிறது" என்று வாசகம் இருப்பதை போல கேலி செய்யப்பட்டுள்ளது.
இந்த கார்டூன்களுக்கு சமூக வலைத்தளங்களில் கடும் கண்டனம் எழுந்துள்ளது. சார்லி ஹெப்டோ பத்திரிகை, சிரியா நாட்டு குழந்தையின் மரணத்தை கொச்சைப்படுத்திவிட்டது என்று உலகமெங்கிலும் எதிர்ப்பு குரல் ஒலிக்கிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications