கொரோனா.. இறந்தவர்களையும் குணமடைந்தோர் பட்டியலில் சேர்த்த சிலி.. காரணத்தை கேட்டால் கிர்ர்ர்ங்குதே!
சண்டியாகோ: தென் அமெரிக்காவின் சிலியில் கொரோனாவால் இறந்தவர்களையும் குணமடைந்தோர் பட்டியலில் சேர்த்து அதற்கு அதிர வைக்கும் ஒரு காரணத்தையும் கூறி வருகிறார்கள்.
Recommended Video
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டியது. இதனால் பலியானோரின் எண்ணிக்கை 1,37,078 ஆக உள்ளது. அது போல் குணமடைந்தோரின் எண்ணிக்கை 3.26 லட்சமாக உள்ளது.
குணமடைந்தோர் என்றால் முதலில் அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று பாசிட்டிவ் என இருக்கும். பிறகு அவர்களுக்கு சிகிச்சை அளித்து அவர்களின் உடல்நிலையில் முன்னேற்றம் அடையும்.

ஆலோசனை
பின்னர் அவர்களுக்கு கொரோனா வைரஸ் சோதனை மேற்கொள்ள ரத்த மாதிரிகள் மீண்டும் சேகரிக்கப்படும். அதில் நெகட்டிவ் என வந்தவுடன் குறிப்பிட்ட இடைவெளி விட்டு மீண்டும் எடுக்கப்படுகிறது. அப்போதும் நெகட்டிவ் என வந்தால் மட்டுமே அந்த நோயாளி குணமடைந்தவர்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டு உரிய ஆலோசனைகளுடன் வீடுகளுக்கு அனுப்பப்படுகிறார்கள்.

பாதிப்பு
கொரோனா கொடுமையானது என்றால் அதிலிருந்து குணமடைவோரின் எண்ணிக்கையே அந்தந்த நாட்டு மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும். அமெரிக்காவில் இந்த நோய் வேகமாக பரவி வருகிறது. இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6.39 லட்சமாக உள்ளது.

குணமடைந்தோர் பட்டியல்
இந்த பாதிப்பு பட்டியலில் அடுத்தடுத்து இத்தாலி, ஸ்பெயின் ஆகியன உள்ளது. எனினும் இதன் உயிரிழப்பு விகிதங்கள் குறைந்தே வருகின்றன. இந்த நிலையில் தென் அமெரிக்காவின் சிலியில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை குணமடைந்தோரின் பட்டியலில் சேர்க்கும் நிலை உள்ளது.

குணமடைந்தோர்
இந்த அதிர்ச்சிகரமான விஷயம் குறித்து கேட்டால் அதற்கு அவர்கள் ஒரு கிருகிருக்க வைக்கும் காரணத்தையும் அவர்கள் கூறுகிறார்கள். இந்த சிலியில் முதல் கொரோனா வைரஸ் நோயாளி மார்ச் 3 ஆம் தேதி உறுதி செய்யப்பட்டார். இங்கு இதுவரை 7900 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 92 பேர் உயிரிழந்துவிட்டார்கள். 2,646 பேர் "குணமடைந்துவிட்டதாக" சிலி கூறுகிறது.

அதிர வைக்கும் காரணம்
சிலியின் சுகாதாரத் துறை அமைச்சர் ஜெய்மே மனலிச் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் கொரோனா பாதித்து இறந்தவர்கள் மூலம் வேறு யாருக்கும் தொற்று பரவாது. அவர்களுடைய நோய்த் தொற்று அவர்களோடு போய்விடுகிறது. அதனால் இறந்தவர்களும் குணமடைந்தவர்கள் பட்டியலில் வருவார்கள் என கூறி அதிரவைக்கிறார் மனலிச். அத்துடன் இறந்தவர்களையும் குணமடைந்தோர் பட்டியலில் சேர்ப்பது சர்வதேச நிபுணர்களின் பரிந்துரையின் பேரிலேயே செய்வதாக மனலிச் தெரிவித்துள்ளார்.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது? -
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா?












Click it and Unblock the Notifications