அமெரிக்காவுக்கு எதிராக சீனா எடுத்த மற்றொரு அதிரடி நடவடிக்கை! இதை டிரம்ப் எப்படி யோசிக்காம விட்டார்!
வாஷிங்டன்: அமெரிக்காவுக்கும்-சீனாவுக்கும் இடையே வர்த்தக போர் தீவிரமடைந்திருக்கும் நிலையில், தற்போது சீனா பதிலடி நடவடிக்கையை தொடங்கியிருக்கிறது. அமெரிக்காவின் போயிங் நிறுவனத்தின் தயாரிப்புகளை வாங்க சீனா தடை விதித்திருக்கிறது.
விமான நிறுவனங்களில் போயிங் முதன்மையானதாகும். இதன் தயாரிப்பில் ஏராளமான விமானங்கள் இயங்கி வருகின்றன. இப்படி இருக்கையில், போயிங் நிறுவன தயாரிப்புகளுக்கு சீனா தடை விதித்திருப்பது கவனம் பெற்றிருக்கிறது.

சீனாவின் மக்கள் தொகை அதிகம். உலகின் இரண்டாவது பெரிய மக்கள் தொகையை கொண்ட நாடாக சீனா இருக்கிறது. மட்டுமல்லாது இங்கு நடுத்தர மக்களின் எண்ணிக்கையும் அதிகம். எனவே விமான பயன்பாடு அதிகமாக இருக்கிறது. பெய்ஜிங், ஷாங்காய், குவாங்சோ, ஷென்ஜேன் போன்ற நகரங்களுக்கு இடையே விமான சேவை அதிக அளவில் இருக்கிறது. கடந்த 2023ம் ஆண்டு சீன விமான பயணிகளின் எண்ணிக்கை 6-7 சதவிகிதம் வரை அதிகரித்துள்ளது.
2040ம் ஆண்டுக்குள் சீனா, உலக விமான சேவையில் 20% அளவிற்கு பங்கு வகிக்கலாம் என விமான உற்பத்தியாளர்கள் கணித்திருக்கின்றனர். அப்படியெனில் விமானங்களின் தேவையும் அதிகரிக்கும்.
ஆனால், சீனாவிலிருந்து போயிங் நிறுவனத்திற்கு வரும் ஆர்டர்கள் மிக மிக குறைவாகவே இருக்கின்றன. காரணம் வரி மேட்டர்தான். அமெரிக்கா சீனாவுக்கு 145% வரியை போட்டிருக்கிறது. சீனா பதிலுக்கு 125% வரியை போட்டிருக்கிறது. இந்த வரி காரணமாக போயிங் நிறுவனத்தின் விமானங்கள், விமான உதிரி பாகங்கள் அதிக விலை ஏற்றத்தை கண்டிருக்கின்றன. எனவே, சீனாவை சேர்ந்த விமான நிறுவனங்கள் போயிங் தயாரிப்புகளை தவிர்க்க தொடங்கியுள்ளன.
ஏற்கெனவே போயிங் நிறுவனத்தை சேர்ந்த விமானங்களை லீசுக்கு எடுத்து சில நிறுவனங்கள் இயக்கி வருகின்றன. அவர்கள் கடும் நஷ்டத்தை சந்தித்திருக்கிறார்கள். அவர்களின் இழப்பை ஈடுசெய்ய நிவாரணம் வழங்குவது பற்றி சீன அரசு யோசித்து வருகிறது. இந்நிலையில்தான் போயிங் நிறுவன தயாரிப்புகளையும், விமானங்களையும் பயன்படுத்த வேண்டாம் என்று சீனா தடை விதித்திருக்கிறது. இது அமெரிக்காவுக்கு விழுந்த பேரிடியாக பார்க்கப்படுகிறது.
கடந்த 2018ம் ஆண்டு சீனாவுக்கு போயிங் நிறுவனம் அதிக அளவில் விமானத்தை சப்ளை செய்து வந்தது. அதாவது போயிங் நிறுவனம் உற்பத்தி செய்யும் ஒவ்வொரு 4 விமானங்களில் ஒன்று சீனாவுக்கு விற்கப்பட்டது. ஆனால் இடையில் போயிங் விமானத்தின் தரம் குறித்து கேள்வி எழுந்தது. எனவே, சீன விமான நிறுவனங்கள் போயிங் விமானத்தை வாங்குவதை தவிர்த்து வந்தன. இப்படி இருக்கையில் தற்போது வர்த்தக போர் காரணமாக முற்றிலுமாக போயிங் தயாரிப்பை தவிர்க்க சீனா உத்தரவிட்டிருக்கிறது.
இந்த உத்தரவு காரணமாக அமெரிக்காவுக்கு சுமார் 10-15 பில்லியன் அமெரிக்க டாலர் வரை இழப்பு ஏற்படலாம் என சொல்லப்படுகிறது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications