வீட்டை காலி செய்யாமல் 10 ஆண்டாக பெண் பிடிவாதம்.. கடைசியில் நடுவில் சிக்கிய வீடு.. நடந்தது என்ன?
பெய்ஜிங்: பாலம் கட்டப் போகிறோம் உங்கள் வீட்டை விட்டுக் கொடுங்கள் என கேட்க பெண் மறுப்பு தெரிவித்ததால் அவரின் வீட்டை சுற்றி பாலம் கட்டியுள்ளனர் சீன அதிகாரிகள்.
ஒரு பாலம் அல்லது பூங்கா மற்றும் மிகப்பெரிய சாலை அமைக்க வேண்டுமானால் அப்பகுதியில் இருக்கும் வீடுகள் அப்புறப்படுத்தப்பட்டு மாற்று பகுதியில் இடம் வழங்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்படும்.
ஆனால் சீனாவின் Guangzhou பகுதியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்ட மேம்பால பணியை முடிக்க அதிகாரிகள் ஆயத்தமாகினர்.

கடைகள்
இந்த நிலையில் அந்த பகுதியில் இருந்த வீடுகள், கடைகளை அரசு எடுத்துக் கொண்டு உரியவர்களுக்க வேறு பகுதியில் வீடு கொடுத்துவிட்டனர். ஆனால் அப்பகுதியில் இருந்த லியாங் என்ற பெண்ணிடம் நீங்கள் இருக்கும் வீட்டை விட்டுக்கொடுங்கள் மாற்று இடம் தருகிறோம் என கட்டுமான அதிகாரிகள் கேட்டுள்ளனர்.

வீட்டை
40 சதுர மீட்டர் கொண்ட அந்த வீட்டை கொடுக்க லியாங் மறுப்பு தெரிவித்து வந்துள்ளார். எப்படியும் பெண்ணிடம் இடத்தை வாங்கி விடலாம் என்ற தைரியத்தில் பாலத்தை கட்டி முடிக்கும் பணியை அதிகாரிகள் தொடங்கிவிட்டார்கள்.

இடம் தரவில்லை
ஆனால் அந்த பெண்ணோ இறுதி வரை அந்த இடத்தை தரவேயில்லை. இதனால் செய்வதறியாது திகைத்த அதிகாரிகள் 10 ஆண்டுகளாக அந்த பெண்ணுடன் இடத்திற்காக போராடி ஓய்ந்தனர்.

வரிப்பணம் வீணடிக்கக் கூடாது
பின்னர் வரிப்பணம் வீணடிக்கக் கூடாது என கருதி பெண்ணின் வீட்டை மட்டும் விட்டுவிட்டு அதனைச் சுற்றி பாலம் கட்டினர் சீன அதிகாரிகள். தற்போது பாலத்தின் நடுவே உள்ள ஒற்றை வீட்டை பார்க்க அப்பகுதியில் சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் குவிந்து வருகின்றனர்.

பால திறப்பு விழா
இந்த வீட்டிற்கு நெயில் ஹவுஸ் என பெயரிட்டுள்ளார்கள். அண்மையில்தான் இந்த பால திறப்பு விழா நடைபெற்றது. அந்த வீட்டை அந்த பெண் கொடுக்காததற்கு பூர்வீக இடம் காரணமா, இல்லை ஏதேனும் சென்டிமென்ட்டா என தெரியவில்லை.
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications