சீனாவில் 6.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்: 381 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
பீஜிங்: நேற்று சீனாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்குப் பலியானவர்கள் எண்ணிக்கை 381 ஆக உயர்ந்துள்ளது.
தெற்கு சீனாவின் யுனான் மகாணத்தில் நேற்று 6.5 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் உண்டானது. இந்த நிலநடுக்கத்தில் 381 பேர் பலியாகியுள்ளனர். 2 ஆயிரம் பேர் காயம் அடைந்துள்ளனர்.

42 ஆயிரம் வீடுகள் சேதம் அடைந்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. யுனான் மாகாணத்தில் நிலநடுக்கத்தால் 50 ஆயிரம் பேர் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப் பட்டுள்ளனர்.
தொடர்ந்து மீட்புப் பணிகள் நடந்து வருவதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் சுமார் 10 கி.மீட்டர் தொலைவில் ஏற்பட்டதாக அமெரிக்க நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications