சீனா ஹேப்பி அண்ணாச்சி…! பல்லாயிரம் வழக்குகளுக்கு தீர்வு கண்டுள்ள சீனா!
Subscribe to Oneindia Tamil
பீஜிங்: சீனாவில் கடந்த ஆண்டு தீர்க்கப்படாமல் இருந்த பல மில்லியன் வழக்குகளுக்கு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் பல்லாயிரக் கணக்கான பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயம் வழங்கப்பட்டுள்ளது.

தீர்ப்பு கிடைச்சுடுச்சு:
கடந்த ஆண்டு மட்டும் கிட்டதட்ட 13.37மில்லியன் வழக்குகளுக்கு தீர்வு வழங்கப்பட்டுள்ளதாக சீனாவின் மக்கள் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

முக்கிய வழக்கின் தீர்ப்பு:
சீனாவின் முன்னாள் ரயில்வே அமைச்சர் லீயூசிஜுன் வழக்கு உட்பட பல்வேறு வகையான வழக்குகளுக்கு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

கிடப்பில் கிடந்த வழக்குகள்:
மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக தீர்க்கப்படாமல் இருந்து வந்த சுமார் ஆயிரத்து 960க்கும் மேற்பட்ட வழக்குகள் முடிக்கப்பட்டுள்ளன.

பெருகிவரும் குற்றங்கள்:
ஆண்டுதோறும் சீனாவில் 6.8சதவீத அளவிற்கு வழக்குகள் அதிகரித்து கொண்டு செல்கின்றன என சீன நீதிமன்றத்தின் ஆய்வு கூறுகிறது.












Click it and Unblock the Notifications