போர் வந்தால் எதிர்கொள்ள தயாராகுங்கள்.. ராணுவ வீரர்களுக்கு சீன அதிபர் வார்னிங்!
போர் வந்தால் அதனை எதிர்கொள்ள தயாராகுங்கள் என ராணுவ வீரர்களை சீன அதிபர் எச்சரித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெய்ஜிங்: போர் வந்தால் அதனை எதிர்கொள்ள தயாராகுங்கள் என ராணுவ வீரர்களை சீன அதிபர் எச்சரித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டோக்லாம் விவகாரத்தில் இந்தியா சீனா இடையே கடந்த சில மாதங்களாக பிரச்சனை நிலவி வருகிறது. எல்லையில் அத்துமீறும் சீனா ராணுவ வீரர்களையும் குவித்து வருவதால் எப்போது வேண்டுமானாலும் போர் வெடிக்கும் என்ற சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் சீனாவில் மக்கள் புரட்சிகர ராணுவம் தொடங்கி 90 ஆண்டுகள் ஆவதன் விழா நாளை நடைபெறவுள்ளது. இவ்விழாவில், ராணுவ வீரர்கள், போர்தளவாடங்களின் பிரமாண்ட அணிவகுப்பு நடைபெறவுள்ளன.

அணிவகுப்பு ஒத்திகை
இதையொட்டி, ஜுரிஹே ராணுவ மையத்தில் அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. ஆயிரக்கணக்கான வீரர்கள் இதில் பங்கேற்றனர்.

நேரில் பார்வையிட்ட அதிபர்
இந்த அணிவகுப்பு ஒத்திகையை சீன அதிபர் ஸி ஜின்பிங் நேற்று நேரில் பார்வையிட்டார். ராணுவ வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக்கொண்டார்.

ராணுவத்துக்கு அதிக பொறுப்பு
இதையடுத்து ராணுவ வீரர்கள் மத்தியில் சீன அதிபர் உரையாற்றினார். அப்போது நாட்டின் அமைதி, பாதுகாப்பு விஷயத்தில் ராணுவத்துக்கு அதிக பொறுப்பு உள்ளது என்று அவர் கூறினார்.

போரை எதிர்கொள்ள..
உலகம் அமைதியாக இருப்பதற்கு பாதுகாப்பு அம்சங்கள் அவசியம். நமது நாட்டின் மீது யாராவது போர் தொடுக்கும் பட்சத்தில் அதை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என அவர் ராணுவர் வீரர்களை எச்சரித்தார்.

சீன ராணுவம் உலக தரம்வாய்ந்தது
எதிர்ப்பவர்களை வெற்றிகொள்ளும் திறமை நமது ராணுவத்துக்கு உள்ளது. நாட்டின் பாதுகாப்பு, முன்னேற்றம் போன்றவற்றில் நமது வீரர்கள் திறம்பட செயல்படுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு நமது ராணுவம் உலகத்தரம் வாய்ந்தது என்றார்.

அதிபர் பேச்சால் பதற்றம்
அருணாச்சல பிரதேசம், சிக்கிம் என இந்திய எல்லைப்பகுதிகளில் சீனா தொடர்ந்து குடைச்சல் கொடுத்து வருகிறது. எல்லைப்பகுதிகளிலும் ராணுவ வீரர்களை குவித்து வருவதால் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சீன அதிபர் ராணுவ வீரர்களை போருக்கு தயாராக இருக்கும் படி பேசியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
சீனாவில் இருந்தபடி ஹைதராபாத்தில் ஆபரேஷன்! 3,000 கிமீ தொலைவில் ரோபோவை கண்ட்ரோல் செய்த இந்திய டாக்டர் -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
அஷ்டமத்து சனி ஓவர்! இனிதான் விஜய் ஆட்டம் ஆரம்பம்! ஆட்சியை இழக்கவும் தயங்க மாட்டார்! ஷெல்வி கணிப்பு -
பங்குச்சந்தை வீழ்ச்சி அடையப்போகிறது! தங்கம், வெள்ளி விலை பல மடங்கு உயரும்.. பிரபல எக்ஸ்பர்ட் -
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை












Click it and Unblock the Notifications