ஆஹா.. கடைசியில் நிலாவில் கை வைத்து விட்டதே சீனா... வருகிறது "டூப்ளிகேட் மூன்!
2022-க்குள் செயற்கை நிலவுகளை தயாரிக்க சீனா முடிவு செய்துள்ளது.
செங்டு நகர், சீனா: அங்க தொட்டு, இங்க தொட்டு, கடைசியில நிலாவையே டூப்ளிகேட் பண்ண ஆரம்பிக்க போகுது சீனா.
சீனாவின் அபரிமிதமான வளர்ச்சி இயற்கையையும் விட்டு வைக்கவில்லை போலும். மின்சார செலவை குறைப்பதற்காகவும், தெரு விளக்குகளுக்கு பதிலாகவும் சீனா, ரஷ்யா, அமெரிக்காவுக்கு இணையாக நின்று ஒரு புது ஐடியாவை யோசித்தது.

செயற்கை கோள்
அதன்படி, செயற்கை நிலவை உருவாக்கிவிட்டால் எந்த வீண் செலவும் வராது, நாடும் எப்பவுமே பளிச்னு இருக்கும் என்று முடிவெடுத்தது. தற்போது செயற்கை நிலாக்கள் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த செயற்கை நிலவுகளுக்கு செயற்கை கோள்கள் மூலம் சக்தி பெரும் வகையில் வடிவமைக்கப்படுமாம்.

2022-க்குள் முடியும்
இதற்கான சோதனையும் நடந்து முடிந்துவிட்டதால், எப்படியாவது வருகிற 2022-ம் ஆண்டிற்குள் இந்த திட்டம் முடிந்துவிடும் என்றும், அதற்குள் மேலும் மூன்று செயற்கை நிலாக்களை அனுப்ப சீனா திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படி செயற்கை நிலவுகள் வந்துவிட்டால் நாடு எப்போதுமே பளிச்சென்றுதான் இருக்கும்.

8 மடங்கு ஒளி
மின்வசதி இல்லாத கிராமப்பகுதிகளுக்கு இந்த செயற்கை நிலா வெளிச்சம் பெரிய வரப்பிரசாதமாக இருக்கும். அதுமட்டுமில்லாமல், வெள்ளம், பேரிடர் போன்ற காலங்களில் நாடே இருளில் மூழ்கிவிட்டாலும் இருக்கவே இருக்கிறது செயற்கை நிலா. இது இயற்கையான நிலாவைவிட 8 மடங்குஒளி தரக்கூடியதாம். அதாவது இந்த செயற்கை நிலவால், 10 முதல் 80 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு ஒளியைப் பாய்ச்ச முடியுமாம்.

புத்தம் புது முயற்சி
சூரியனிடமிருந்து வெளிச்சத்தை நிலா வாங்கினால், இந்த நிலாவிலிருந்து வெளிச்சத்தை சீனா வாங்கி இப்படி ஒரு திட்டத்தை மேற்கொண்டுள்ளது. நிலாவில் போய் வாழலாம் என்ற பேச்சு அடிபட்டதுபோய், இப்போது நிலாவையே பூமிக்கு வரவழைக்க புத்தம் புது முயற்சியில் இறங்கிஉள்ளது சீனா.
-
27 ஆண்டுகளுக்கு பிறகு.. இன்று ப்ளூ மைக்ரோ மூன்! மிஸ் பண்ணாதீங்க மக்களே! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications