திபெத்தில் 146 பில்லியன் டாலர் கொட்டும் சீனா...நேபாளத்துக்கு ரயில் பாதை!!
பீஜிங்: சீனாவுக்கும் இந்தியாவுக்கும் எல்லையில் கடந்த மே மாதத்தில் இருந்து பதட்டம் நிலவி வரும் நிலையில் திபெத்தில் 146 பில்லியன் டாலர் அளவிற்கு உள்கட்டமைப்புப் பணிகளில் ஈடுபடுவதற்கு பீஜிங் முடிவு செய்துள்ளது. முன்பு மற்றும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டு இருக்கும் அனைத்துப் பணிகளும் விவரவில் துவங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
இந்தியாவுக்கும், சீனாவுக்கும் சமீபத்தில் எல்லையில் பதற்றம் நிலவி வரும்நிலையில், தென்மேற்கு மண்டலத்தில் உள்கட்டமைப்பை மேம்படுத்த சீனா முடிவு செய்துள்ளது. திபெத்தின் எதிர்கால ஆட்சி குறித்து கடந்த வாரம் கம்யூனிஸ்ட் தலைவர்கள் கலந்து கொண்ட கூட்டம் நடந்தது. இதில் சீன அதிபர் ஜி ஜின்பிங் கலந்து கொண்டார். அப்போது, இந்த நடவடிக்கைகளுக்காக பணியாற்றும் அதிகாரிகளை பாராட்டியுள்ளார். அதே நேரம், பிராந்தியத்தில் ஒற்றுமையை வளப்படுத்தவும், புத்துயிர் பெறவும், வலுப்படுத்தவும் அதிக முயற்சிகள் தேவை என்று குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து செய்தி வெளியிட்டு இருக்கும் சீன அரசின் ஜின்ஹுவா செய்தி ஏஜென்சி, ''பெரும்பாலான உள்கட்டமைப்பு வசதிகள் விரைவில் முடிவடையும். சிசுவான் - திபெத் ரயில் அமைக்கும் பணியும் துவங்கும். இந்த ரயில் பாதை நேபாளத்தையும், திபெத்தையும் இணைக்கும். இத்துடன் திபெத் தன்னாட்சிப் பகுதியில் புதிய துறைமுகம் இன்று அமைக்கப்படும்'' என்று தெரிவித்துள்ளது.
சிசுவான் திபெத் ரயில் பாதை செங்டுவையும் லாசாவையும் இணைக்கிறது. இதற்கு இதுவரை திபெத் அரசாங்கம் அனுமதி வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. ஆனாலும், அடுத்த வாரத்தில் இருந்து இதற்கான பணிகள் துவங்கப்படும் என்று சீனா அறிவித்துள்ளது.
இந்தியா திபெத் எல்லையில் இருக்கும் நிங்சி பகுதியை ஒட்டி இந்த ரயில் பாதை செல்லும் என்று கூறப்பட்டுள்ளது. சீனாவுக்கும், நேபாளத்துக்கும் இடையே கடந்த 2018ல் பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. அவற்றில் ஒன்றுதான், காத்மாண்டு மற்றும் திபெத்தின் இரண்டாவது பெரிய நகரமான ஷிகட்சேவுக்கும் இடையே ரயில் பாதை அமைப்பது. இந்தியாவின் நட்பு நாடாக நேபாளம் பார்க்கப்பட்டு வரும் நிலையில் அந்த நாட்டின் உள்கட்டமைப்பு மற்றும் ரயில் பாதைகளுக்கு என்று சீனா முதலீட்டை குவித்து வருகிறது.
திபெத்தில் பெரிய அளவில் ரயில் பாதை அமைப்பது சாலை அமைப்பது என்பது சீனாவின் திட்டமாக இருந்து வருகிறது. சீனாவின் முக்கிய நகரங்களுக்கும், திபெத்துக்கும் இடையே ரயில் பாதை அமைப்பதில் சீனா ஆர்வம் காட்டி வருகிறது.
திபெத்துக்குள் கடந்த 1950ஆம் ஆண்டில் சீனா தனது ராணுவத்தை அனுப்பு தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. வலதுசாரி நாடுகளின் கண்டனத்தை சீனா லட்சியம் செய்யவில்லை. திபெத்தில் இருந்து வெளியேறிய தலைவர்களின் கருத்துக்களை கேட்க விரும்பவில்லை. அதேசமயம், திபெத்தில் வளர்ச்சிகளை கொண்டு வருவதாகவும், அந்த நாட்டின் பண்பாடு மற்றும் மதத்தை மிகவும் மதிப்பாக சீனா கூறிவருகிறது.
கடந்த சில வாரங்களாக மீண்டும் திபெத் முக்கியத்துவம் பெறுகிறது. இதற்குக் காரணம், திபெத்துக்கான ராஜதந்திர அணுகுமுறையை தடுப்பதிலும், "மனித உரிமை மீறல்களில்" ஈடுபடுவதிலும் ஈடுபட்டுள்ள சில சீன அதிகாரிகளுக்கு அமெரிக்கா விசாக்களைக் கட்டுப்படுத்தும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ தெரிவித்து இருந்தார். இந்த நிலையில்தான் திபெத் நடவடிக்கைகளில் சீனா மீண்டும் ஆர்வம் காட்டி வருகிறது.
-
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான் -
சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை!












Click it and Unblock the Notifications