Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சீனாவில் அடுத்த ஷாக்.. புதிய வகை பறவை காய்ச்சல் ஒருவருக்கு உறுதி.. மனிதர்கள் மத்தியில் பரவுமா?

Subscribe to Oneindia Tamil

பெய்ஜிங்: சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் 41 வயதாகும் ஒருவருக்கு H10N3 பறவை காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகில் இந்த வகை பறவை காய்ச்சல் மனிதர்கள் மத்தியில் கண்டறியப்படுவது இதுவே முதல்முறையாகும்.

Recommended Video

    China-வில் ஒருவருக்கு புதிய வகை பறவை காய்ச்சல்.. மனிதர்களுக்கு பரவுமா?

    கடந்த பிப்ரவரி மாதம் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் பறவை காய்ச்சல் அதி வேகமாகப் பரவியது. காகங்கள் உள்ளிட்ட பல பறவைகள் பறவை காய்ச்சல் காரணமாக உயிரிழந்தன.

    இந்த பறவை காய்ச்சல் கோழிப் பண்ணைகளுக்கும் பரவ, வேறு வழியின்றி நூற்றுக் கணக்கான கோழிகளைப் பண்ணை உரிமையாளர்களே அழிக்க வேண்டிய சூழ்நிலையும் ஏற்பட்டது.

    சீனாவில் பறவை காய்ச்சல்

    சீனாவில் பறவை காய்ச்சல்

    இருப்பினும், இந்தப் பறவை காய்ச்சலில் பல வகைகள் மனிதர்களுக்குப் பரவாது என்பது சற்றே நிம்மதி தரும் செய்தியாக அமைந்திருந்தது. இந்நிலையில், சீனாவின் கிழக்கு மாகாணமான ஜியாங்சுவில் 41 வயதான ஒருவர் H10N3 பறவை காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்த H10N3 பறவை காய்ச்சல் மனிதர்களுக்குப் பரவுவது இதுவே முதல்முறையாகும். இந்தத் தகவலைச் சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் (என்.எச்.சி) உறுதி செய்துள்ளது.

    H10N3 பறவை காய்ச்சல்

    H10N3 பறவை காய்ச்சல்

    ஜியாங்சு மாகாணத்திலுள்ள ஜென்ஜியாங் பகுதியில் வசிக்கும் இந்த நபருக்கு கடந்த ஏப்ரல் மாத இறுதியில் காய்ச்சல் உள்ளிட்ட சில அறிகுறிகள் ஏற்பட்டுள்ளன. இதையடுத்து அவர் கடந்த ஏப்ரல் 28 ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்குத் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டது. கடந்த மே 28ஆம் தேதி அந்த நபர் H10N3 பறவை காய்ச்சலால் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது.

    Array

    Array

    ஆனால் அந்த நபருக்கு இந்த பறவை காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது என்பது குறித்த தகவல்களைச் சீனா வெளியிடவில்லை. இந்த H10N3 பறவை காய்ச்சல் வகை வேகமாகப் பரவாது. ஒப்பீட்டளவில் கடுமையானது பாதிப்புகளை ஏற்படுத்தாது என்பது சற்றே அறுதல் அளிக்கும் ஒரு விஷயமாகும். அந்த நபர் தற்போது சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு விட்டதாகவும், அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும் சீனா தெரிவித்துள்ளது.

    சீனா

    சீனா

    அந்த நபருடன் தொடர்பில் இருந்தவர்களும் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டனர் என்றும் அவர்களில் யாருக்கும் பறவை காய்ச்சல் பாதிப்பு ஏற்படவில்லை என்றும் சீனா தெரிவித்துள்ளது. பறவை காய்ச்சலிலும் பல வகைகள் உள்ளன. அவற்றில் சில வகை பறவை காய்ச்சல்கள் சீனாவில் மனிதர்கள் மத்தியில் அவ்வப்போது பரவுவது வழக்கமான ஒரு நிகழ்வுதான். கடந்த 2016-2017 ஆம் ஆண்டுகளில் H7N9 பறவை காய்ச்சல் காரணமாக 300 பேர் கொல்லப்பட்டனர்.

    மனிதர்கள் மத்தியில் பரவுமா

    மனிதர்கள் மத்தியில் பரவுமா

    ஆனால், இதுவரை H10N3 பறவை காய்ச்சல் பாதிப்பு மனிதர்கள் யாருக்கும் உறுதி செய்யப்பட்டதில்லை. தற்போது இந்த வகை பறவை காய்ச்சல் மனிதர்களுக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், இவை மனிதர்களுக்கு இடையே பரவ வாய்ப்பில்லை என்றே சீனா தெரிவித்துள்ளது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+